ஆப்நகரம்

என்னம்மா மீனா இப்படி பண்ணிட்டீங்க? ஆனந்தக் கண்ணீரில் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் மிகுந்த சென்டிமென்ட் காட்சிகளாக கடந்து செல்கின்றன.

Samayam Tamil 30 Dec 2020, 5:25 pm
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருக்கும் செய்தி கேட்டு குடும்பத்தினர் மகிழ்ச்சியடைகின்றனர். கண்ணா மீனா அண்ணியிடம் இந்த செய்தியை சொல்ல அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு மீனாவிடம் இதைப் பற்றி கூறியதும் அவர் உடனே கண்ணாவுடன் வீட்டுக்கு வர புறப்படுகிறார். இதைப் பார்த்து மீனாவின் அப்பா கடுப்பாகிறார். அவர் இத்தனை நாட்களாக போட்டு வைத்த திட்டத்தையே மீனா சுக்குநூறாக்கி விடுகிறார். கண்ணாவுடன் வண்டியில் கிளம்புகிறார். வழியில் தனம் அக்காவை எவ்வளவு கேவலமாக பேசினோம் என்று நினைத்து வருந்துகிறார்.
Samayam Tamil Pandian Stores Family


தனம் வீட்டுக்கு முல்லையின் அத்தாச்சி வருகிறார். இவர் தனத்தின் அண்ணன் மனைவி. அவரிடம் முல்லை தனம் கர்ப்பமாக இருப்பதை சொன்னதும், அவர் மகிழ்ச்சியில் அழுகிறார். 15 ஆண்டுகள் கழித்து தனம் கர்ப்பமாக இருப்பதால் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். அவர் தனது மாமியார், அதாவது தனத்தின் அம்மாவிடம் இந்த செய்தியை சொல்ல முல்லையை கூட்டிக் கொண்டு புறப்படுகிறார்.

ஒரு போன் கால் பேச இவ்ளோ பிரச்சனையா.. செம்பருத்தி சீரியல் அட்ராசிட்டி

அந்த சமயம் மீனா வீட்டுக்குள் வருகிறார். இவரைக் கண்டு ஜீவா ஷாக் ஆக, எந்த பதற்றமும் இல்லாமல் தனம் அக்காவை பார்த்து ஓடி வந்து கட்டி மகிழ்கிறார். நீங்கள் என்னை எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டீர்கள். நானும் அதில் பாதியாவது உங்களை பார்த்துக் கொள்வேன் என்று சொல்கிறார். இத்தனை நாளாய் கோவமாக இருந்த மீனா குடும்பத்தினரிடம் சகஜமாக பழகுகிறார்.

தனம் மீனாவிடம் அவர் வந்தது மகிழ்ச்சி என்று கூறுகிறார். இப்படியாக காட்சிகள் நகர்கின்றன. தனம் அம்மாவை சந்தித்து உடனே வீட்டுக்கு வரச் சொல்லி கையோடு அழைத்து வருகிறார் முல்லை. தனம் அம்மா வீட்டு வேலைகளை மருமகளிடம் ஒப்படைத்து விட்டு அவசரமாக மகள் வீட்டுக்கு கிளம்புகிறார்.

பையா கணேஷ் கொலை வழக்கில் சிக்குவாரா அனு? அர்ஜுன் போடும் மாஸ்டர் பிளான் என்ன?

இவருக்கு ஒரே பதற்றம். எதற்காக அவசரமாக முல்லை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர். தனத்துக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த அவரது அண்ணி திட்டமிடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிந்தது.

அடுத்த செய்தி