ஆப்நகரம்

சிதம்பரம் செய்த மோசடி! நாம் இருவர் நமக்கு இருவரில் அடுத்து வெடிக்க போகும் குண்டு

நாம் இருவர் நமக்கு இருவரில் இன்று மாறன் மற்றும் மாயன் இருவரும் சந்திக்கின்றனர்.

Samayam Tamil 18 Aug 2021, 9:54 pm
மாறன் மற்றும் அம்மா வீட்டுக்கு வந்திருப்பதால் மாசாணி - வடிவு கேங் ஆடிப்போய் இருக்கிறது. அவனை எப்படி வெளியில் அனுப்புவது என திட்டம் போடுகின்றனர்.
Samayam Tamil naam iruvar namaku iruvar 2 serial today maayan meets maaran while chidambaram reveals about his flashback
சிதம்பரம் செய்த மோசடி! நாம் இருவர் நமக்கு இருவரில் அடுத்து வெடிக்க போகும் குண்டு



நாச்சியார் உருக்கம்

நாச்சியார் மற்றும் மூன்று மகள்களும் வெளியில் நின்றுகொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்காக வீடு பார்க்க சென்ற மாயன் சாவி வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார். இருந்தாலும் நாம் உடனே கிளம்பிவிடலாம் என சொல்கிறார் சரண்யா. மாயனின் அம்மா மற்றும் தம்பி இருவரும் வந்துவிட்டார்கள். அவர்கள் நடுவில் ஆயிரம் இருக்கும், நாம் இங்கே இருந்து அதை எல்லாம் பார்க்கனுமா என சரண்யா கூறுகிறார்.

ஆனால் நான் அவர்களுக்கு மனசரிந்து எந்த கெடுதலும் செய்யவில்லை. அவர்கள் பிரிந்த பிறகு தான் நான் அவர்கள் வாழ்க்கையில் வந்தேன். ஆனால் எனக்காக தன் அவரை பிரிந்தார் என தவறாக நினைத்துக்கொண்டார்கள். அதன் பின் நான் சாரதாவுக்கு மாதமாதம் பணம் அனுப்பி கொண்டு தான் இருந்தேன் . அதனால் அவர்கள் என்னை தவறாக நினைக்க எதுவும் இல்லை என நாச்சியார் எமோஷ்னலாக கூறுகிறார்.

சிதம்பரம் செஞ்ச தில்லுமுல்லு

நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அவர்கள் கொலையும் செய்துவிட்டு தண்டனையில் இருந்து தப்பி சந்தோசமாக தான் இருக்கிறார்கள். இப்போது வந்திருக்கும் சாரதா நாச்சியாரை மன்னித்து வீட்டுக்குள் ஏற்றுக்கொள்வார். அதனால் நாம் தான் நடுத்தெருவுக்கு போக போகிறோம் என வடிவு கூறுகிறார்.

அதன் பின் தான் சிதம்பரம் ஒரு உண்மையை கூறுகிறார். நாச்சியார் கொடுத்த பணத்தை சரதாவிடம் கொடுக்காமல், அவர்களை ஓட ஓட விரட்டியது நான் தான். அதை நாச்சியார் தான் செய்ய சொல்லியிருப்பார் என அவர்கள் நினைத்து இருக்கிறார்கள். அதனால் நாச்சியாரை அவர்கள் மன்னிக்க வாய்ப்பே இல்லை என கூறுகிறார்.

மாறனை போய் பாரு மாயன்

மாயன் அதன் பின் வீட்டிற்கு வந்து சேர்கிறார். அவரை போய் மாறனை போய் பாரு என சொல்கிறார்கள். ஆனால் மாயன் பார்க்க மறுக்கிறார்.

நீ அவர்களை பிரிந்து தவித்ததை போல, அவர்களும் கஷ்டப்பட்டு தான் இருப்பார்கள் என சொல்லி மாயனை சென்று அவர்களை பார்க்க வைக்கிறார் நாச்சியார்.

தம்பியை பார்த்து எமோஷ்னல் ஆகும் மாயன்

மாயன் அதன் பின் உள்ளே சென்று மாயனை பார்க்கிறார். அவரை போலவே இருப்பதை பார்த்து பிரமிக்கிறார். அதன் பின் மாறன் தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை பற்றி கூறுகிறார். ஒரு வேலை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு இருக்கிறோம், ஒதுங்க ஒரு வீடு கூட இருக்காது. அதனால் தான் உழைத்து முன்னேறிய பிறகு இங்கு வர வேண்டும் என இருந்தோம்.

அதனால் தான் இத்தனை வருடங்கள் வரவில்லை என சொல்கிறார் மாறன். இருவரும் எமோஷ்னலாக பேசிக்கொள்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி