ஆப்நகரம்

முத்துராசின் பேய் வந்ததா? நாம் இருவர் நமக்கு இருவர் 2ல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று முத்துராசின் ஆவி அவரது அம்மா வடிவை பார்க்க வருகிறது. அது பேயா அல்லது வடிவின் கற்பனையா என்கிற சந்தேகம் நம் மனதில் எழுகிறது.

Samayam Tamil 23 Jul 2021, 12:48 am
நேற்றைய எபிசோடில் மஹா வக்கீல் சொன்னபடி மாயன் வீட்டுக்கு வந்து ஆறு மாதம் இருக்க ஒப்புக்கொள்கிறார். பெட்டியுடன் வரும் அவரை அனைவரும் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்.
Samayam Tamil naam iruvar namaku iruvar 2 today is that really muthurajs ghost
முத்துராசின் பேய் வந்ததா? நாம் இருவர் நமக்கு இருவர் 2ல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்


நாம் விலகியே இருப்போம்

மஹா தான் இங்கு வந்திருக்கும் காரணத்தை தெளிவாக கூறிவிடுகிறார். நான் இங்கு உங்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக வரவில்லை. ஆறு மாதம் இருந்தால் தான் நிராதாரமாக விவாகரத்து கிடைக்கும் என சொன்ன காரணத்தால் தான் நான் வந்திருக்கிறேன்.

நாம் யாருமே நெருக்கமாக பழக வேண்டாம், தான் தள்ளி தான் இருப்பேன். நான் யாரிடமும் சரியாக பேசவில்லை என்றால் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என சொல்கிறார்.

வடிவிடம் பேசும் முத்துராசு

வடிவு தூங்கிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு ஒரு சத்தம் கேட்கிறது . வெளியில் சென்று பார்க்கும்போது அங்கு முத்துராசு உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறான். அவனை பார்த்து அதிர்ச்சி ஆகும் அவர் அழுது துடிக்கிறார்.

தன்னை சுட்டுவிட்டார்கள் என்றும். உங்களிடம் வர நினைக்கிறேன் வரமுடியவில்லை என்றும் முத்துராசு கூறுகிறான். அதன் பின் வடிவு உள்ளே சென்று கணவரை கூட்டி வருகிறார். ஆனால் அங்கு யாருமே இல்லை.

பேயா அல்லது பிரமையா?

வடிவு மிகவும் கண்ணீர் விட்டு முத்துராசு பற்றி பேசுகிறார். அவரது ஆவி இங்கே தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அவனுக்கு நாளை ஒரு காரியம் செய்துவிட வேண்டும் என கூறுகிறார்.

அந்த நேரத்தில் முத்துராசு வாயிற்படியில் அமர்ந்து கண்ணீர் விடுவது போல காட்டப்படுகிறது. அதனால் அது பேயா என்கிற சந்தேகம் சீரியல் பார்க்கும் நமக்கே எழுகிறது.

அது என்ன என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.

மஹாவை சமாதானப்படுத்த முயற்சிக்கும் மாயன்

மஹா அதிகம் கோபமாக இருக்கும் நிலையில் அவரை சமாதானப்படுத்த மாயன் முயல்கிறார். அவர் ஜூஸ் எடுத்துக்கொண்டு போய் கொடுத்தால் அவர் குடிக்க மறுக்கிறார்.

மஹா வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கயல் என பெயர் வைத்து இருப்பதாகவும், அது குழந்தைக்கு தான் குடி என சொல்லி அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் மஹா கோபமாகவே தான் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்தது.

அடுத்த செய்தி