ஆப்நகரம்

செல்போனை எரிக்கும் ஐஸ்வர்யா! முத்துராசு எங்கே? எல்லோரிடமும் சண்டைக்கு போன வடிவு!

முத்துராசை சுட்டது யார் என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இன்று அவனது செல்போன் ஒரு லெட்டர் உடன் ஐஸ்வர்யாவிடம் வந்து சேர்கிறது.

Samayam Tamil 21 Jun 2021, 10:44 pm
நாம் இருவர் நமக்கு இருவர் கடந்த வார எபிசோடில் போதையில் இருக்கும் முத்துராசை மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டு கொலை செய்கிறார். ஆனால் அது யார் என்பது தெரியாத வகையில் முகம் மூடி இருந்தது.
Samayam Tamil naam iruvar namaku iruvar serial today aiswarya finds muthurasus cellphone vadivu fights with maayan
செல்போனை எரிக்கும் ஐஸ்வர்யா! முத்துராசு எங்கே? எல்லோரிடமும் சண்டைக்கு போன வடிவு!


ஐஸ்வர்யாவிடம் கிடைக்கும் லெட்டர், போன்

ஐஸ்வர்யா தனக்கு நடந்தது அனைத்தையும் பற்றி யோசித்து பார்க்கிறார். முத்துராசுடன் நெருக்கமாக பழகி, திருமணம் செய்து, அதன் பின் அவன் செய்த கொடுமைகள் வரை அனைத்தையும் நினைத்து பார்க்கிறார். அந்த நேரத்தில் யாரோ காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது.

ஐஸ்வர்யா வெளியில் சென்று பார்க்கும்போது அங்கு யாரும் இல்லை, ஒரு லெட்டர் மற்றும் செல்போன் மட்டும் இருக்கிறது. 'இந்த போனை நானே அழித்து இருப்பேன், ஆனால் அது என்ன ஆனது என நீ வருத்தப்படுவாய் என்பதால் தான் இதை உன்னிடம் ஒப்படைக்கிறேன்' என லெட்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

போனை எரிக்கும் ஐஸ்வர்யா

அந்த போனை எடுத்து பார்க்கும் அவர் அதில் அவரது அந்தரங்க வீடியோக்கள் அனைத்தும் அப்படியே இருப்பதை பார்க்கிறார். அதன் பின் அது பற்றி காயத்ரியிடம் சொல்ல, அந்த போனை உடனே எரித்துவிடலாம் என சொல்கிறார் அவர்.

பெட்ரோல் ஊற்றி அதன் மீது ஐஸ்வர்யாவை தீ வைக்க சொல்கிறார். லெட்டர் மற்றும் போன் இரண்டும் எரிந்து சாம்பலாகிறது.

இதை செஞ்சது யாரு?

இப்படி ஒரு பெரிய விஷயத்தை செய்தது யார் என்கிற பேச்சு அனைவர் மத்தியிலும் நடக்கிறது. போனை கொண்டு வந்தவர்களுக்கு நன்றி கூறும் ஐஸ்வர்யா, அதை செய்தது யார் என்பதை சொல்லிட்டே செய்யலாமே, ஏன் ரகசியமாக செய்ய வேண்டும் என கேட்கிறார்.

"அதை பற்றி ஏன் ஆராய்ச்சி செய்துகொண்டு, இது நடக்க வேண்டும் என்று தானே அனைவரும் நினைத்தோம்" என மாயன் சொல்கிறார்.

இதை வைத்து பார்க்கும்போது மாயன் தான் இதை செய்த்திருப்பார் என கத்தி சூசகமாக சொல்கிறார். ஆனால் மாயன் அதை ஒப்புக்கொள்வதில்லை.

ரகளை செய்யும் முத்துராசின் அம்மா

முத்துராசின் அம்மாவை அழைக்கும் மாசாணி, உன் மகன் கெஸ்ட் ஹவுசில் காணவில்லை எங்கே போனான் என கேட்கிறார். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறுகிறார்.

அதன் பின் வீட்டிற்க்கு சென்று மாயன் உட்பட அனைவரிடமும் சண்டை போடுகிறார் அவர். முத்துராசை என்ன செய்தீர்கள் என சொல்லுங்கள் என கேட்கிறார். ஆனால் யாரும் வாயை திறக்கவில்லை. இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி