ஆப்நகரம்

Naam Iruvar Namaku Iruvar: சின்ராசு போட்ட பெரிய திட்டம்.. மாயனை வீட்டை விட்டு அனுப்ப இப்படி ஒரு பிளானா

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று மாயனை விட்டை விட்டு அனுப்ப திட்டம் போடுகிறார் முத்துராசு. மாயன் மீது போலீஸ் புகார் அளிக்கும்படி அவரது மாமனாரை தூண்டி விடுகிறார்.

Samayam Tamil 20 May 2021, 8:52 pm
மஹாவை பிரிந்த வருத்தத்தில் மாயன் குடித்துவிட்டு புலம்புகிறார். அதன் பின் முத்துராசு ஒரு பெரிய திட்டத்துடன் மாயனின் மாமனாரை சென்று சந்திக்கிறார்.
Samayam Tamil naam iruvar namaku iruvar serial today chinrasu asks rathnavel to file police complaint against maayan
Naam Iruvar Namaku Iruvar: சின்ராசு போட்ட பெரிய திட்டம்.. மாயனை வீட்டை விட்டு அனுப்ப இப்படி ஒரு பிளானா



குடித்துவிட்டு புலம்பும் மாயன்

குடித்து விட்டு நடு வீட்டில் படுத்துக்கொண்டு புலம்பிக் கொண்டிருக்கிறார் மாயன். மஹா தன்னை விட்டு பிரிந்தது. மாமா தன்னை புரிந்துகொள்ளாமல் [போனது பற்றி சொல்லி புலம்புகிறார். அதைக் கேட்டு கலக்கம் அடைகிறார் நாச்சியார். அவரை தூக்கிக் செல்ல மகளையும் உதவிக்கு அழைக்கிறார். அவர் மாயனை பற்றி தவறாக பேச. இந்த வீட்டில் யார் ஒழுக்கமாக இருக்கிறார்கள். அவரவர் அவரவர் விருப்பத்திற்கு தகுந்தார் போல தானே செய்து கொண்டிருக்கிறார்கள் என நாச்சியார் சில விஷயங்களை பேசுகிறார். அதற்கு பிறகு அவரும் உதவிக்கு வந்து மாயனை தூக்கி சென்று அறையில் தூங்க வைக்கிறார்கள்.

மாயனின் மாமனாரை சந்திக்கும் முத்துராசு.. பெரிய சதி திடடம்

மஹாவின் அப்பா அவரது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது முத்துராசு காரில் வந்து இறங்குகிறார். அவனை போகும்படி அவர் சொல்ல, தன்னை வர சொன்னது சித்திதான் என சொல்லி ஷாக் கொடுக்கிறார்.

இவ்வளவு மோசடி செய்த மாயனை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என கூறுகிறார் அவர். மாயனின் அப்பா உயில் எழுதி வைக்கும் போது மாயன் ஒரு வருடம் எந்தவித தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் அப்படி செய்தால் அவனால் சொத்தை அனுபவிக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றி முத்துராசு சொல்கிறான். மாயன் பற்றி போலீசில் புகார் அளித்தால், அவனால் இனி சொத்தை அனுபவிக்க முடியாதுஹ். அவனை வீட்டில் இருந்து துரத்தி விடலாம் என கூறுகிறான்.

மாமனார் முதலில் யோசித்த பிறகு ஒப்புக் கொள்கிறார்.

மாயனின் தங்கையை சீண்டும் முத்துராசு

மாயனை வீட்டைவிட்டு வெளியில் அனுப்ப ஒரு பெரிய திட்டம் போட்டு இருப்பதாகவும். நாளை அது நடந்து விடும் என்றும் அவரது தங்கையிடம் கூறுகிறார் முத்துராசு. அதனால் மாயனின் பெட்டி படுக்கை, துணியை அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிடு என அவரது தங்கை இடம் சொல்கிறார். ஆனால் அவர் கோபமாக இவரை திட்டி விட்டு போகிறார்.

போலீஸ் ஸ்டேஷன் வரும் மாயன்

முத்துராசு போலீஸ் ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருக்கிறான். மாயனின் மாமனார் வந்தால் உடனே புகார் அளித்து விடலாம் என அவன் காத்துக் கொண்டிருக்கும் போது மாயன் பைக்கில் வந்து இறங்குகிறார். இப்போது எதற்கு இங்கே வந்தான் மாயன் என் முத்துராசு குழம்புகிறான். வழக்கம் போல இருவரும் மாறிமாறி வாயில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது. மாயனின் மாமனார் புகாரளிக்க வருவாரா இல்லையா என்பது நாளை தான் தெரியவரும்.

அடுத்த செய்தி