ஆப்நகரம்

ஐஸ்வர்யா குளிக்கும் வீடியோவை வைத்து மிரட்டும் முத்துராசு: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அதிர்ச்சி தரும் பெரிய ட்விஸ்ட்!

ஐஸ்வர்யா குளிக்கும் விடியோவை எடுத்து வைத்து கொண்டு அதை காட்டி ஐஸ்வர்யாவை மிரட்டுகிறார் முத்துராசு.

Samayam Tamil 14 Jun 2021, 11:08 pm
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கடந்த வாரம் ஐஸ்வர்யாவை அடித்து மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறார் முத்துரராசு. அவனது அம்மாவும் அதற்கு உடந்தை. ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருப்பதை மஹா பார்த்து விடுகிறார். உடனே மாயனுக்கு போன் செய்து வரவைக்கிறார்.
Samayam Tamil naam iruvar namaku iruvar serial today muthurasu blackmails aishwarya with video
ஐஸ்வர்யா குளிக்கும் வீடியோவை வைத்து மிரட்டும் முத்துராசு: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அதிர்ச்சி தரும் பெரிய ட்விஸ்ட்!


ஆனால் மாயன் வந்து பார்க்கும்போது ஐஸ்வர்யா அங்கு இல்லை.

ஐஸ்வர்யா எங்கே? வீட்டில் கொந்தளிக்கும் மாயன்

மாயன் மருத்துவமனையில் இருந்து நேராக வீட்டிற்கு சென்று முத்துராசின் அப்பா மற்றும் அம்மா இருவரையும் அழைத்து ஐஸ்வர்யா எங்கே என கேட்கிறார். ஆனால் முத்துராசின் அம்மா வழக்கம்போல மழுப்பினார். ஆனால் மாயன் விடாமல் அவரை துருவி துருவி கேட்டுவிட்டு அதன் பிறகு ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருக்கும் விஷயம் பற்றி கூறுகிறார்.

இப்போதே ஐஸ்வர்யா இங்கே வந்தாகனும் என கத்துகிறார் மாயன். அதன் பின் போன் செய்து பார்க்கிறார் முத்துராசின் அம்மா. ஆனால் அழைப்பு போகவில்லை. அதன் பின் ஐஸ்வர்யா தலையில் கட்டுடன் வீட்டுக்கு கொண்டு வருகிறார்.

உண்மையை மறைக்கும் ஐஸ்வர்யா

என்ன ஆனது, தலையில் எப்படி அடிபட்டது என அனைவரும் ஐஸ்வர்யாவிடம் கேட்கின்றனர். மாயன் முத்துராசின் சட்டயை பிடித்து கேட்கிறார். ஆனால் தான் கோவில் படிக்கட்டில் விழுந்ததால் தான் அடிபட்டது என ஐஸ்வர்யா கூறுகிறார்.

மாயன் வறுபுறுத்தி கேட்டாலும் ஐஸ்வர்யா உண்மையை கூறுவதில்லை. அவர் ஏன் முத்துராசை காட்டிக்கொடுக்காமல் இருக்கிறார் என மாயனுக்கு கடும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ஐஸ்வர்யா குளிக்கும் வீடியோவை எடுத்து மிரட்டும் முத்துராசு

அதன் பின் ஐஸ்வர்யாவிடம் காயத்ரி சென்று பேசுகிறார். ஏன் இப்படி சென்னே.. தாலி மீது இருக்கும் மரியாதையா என கேட்கிறார். ஐஸ்வர்யா மருத்துவமனையில் நடந்த விஷயத்தை நினைத்து பார்க்கிறார்.

கோவிலில் வழுக்கி விழுந்ததால் தான் காயம் பட்டது என சொல்ல வேண்டும், அப்படி சொல்லவில்லை என்றால் நீ குளிக்கும் வீடியோவை இன்டர்நெட்டில் விட்டுவிடுவேன் என மிரட்டுகிறார் முத்துராசு. இதை நினைத்து பார்க்கும் ஐஸ்வர்யா, அதை நேரடியாக காயத்ரியிடம் கூறுவதில்லை. நமது குடும்பத்திற்கு ஒரு பெரிய அசிங்கம் வந்துவிடக்கூடாது என அவர் நினைப்பதாக அவர் சொல்கிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

அடுத்த செய்தி