ஆப்நகரம்

நீயெல்லாம் என்ன ஜென்மம்.. விவேக் பற்றி பதிவிட்ட மீரா மிதுனை திட்டிய நெட்டிசன்கள்

மீரா மிதுன் இன்று ட்விட்டரில் விவேக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அந்த ட்விட்டுக்கும் நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர்.

Samayam Tamil 18 Apr 2021, 2:43 am
விவேக் மரணம் பற்றி ட்விட்டரில் மீரா பதிவிட்டதற்கு பார்த்துவிட்டு நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர்.
Samayam Tamil netizens comment about meera mithun tweet on vivek
நீயெல்லாம் என்ன ஜென்மம்.. விவேக் பற்றி பதிவிட்ட மீரா மிதுனை திட்டிய நெட்டிசன்கள்


விவேக் மரணம்

நடிகர் விவேக்கின் மரணம் ஒட்டுமொத்த சினிமா துறையையும் அதிர்ச்சியில் மூழ்கவைத்து உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கொரோன தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தற்போது இல்லை என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் விவேக் மரணத்திற்கு தெரிவித்து இருக்கின்றனர். முதலமைச்சர் தொடங்கி பிரதமர் அவர் ட்விட்டரில் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

மீரா மிதுனின் ட்விட்

இந்நிலையில் மீரா மிதுன் ட்விட்டரில் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து ட்விட் போட்டிருக்கிறார்.

"வனம் வளர்த்தார்..

வாழ்க்கையை வார்த்தைகளால், வாய் வழியே உணர்த்தினார்.. விஞ்ஞானம் விலக்கிய கலாமாக வாழ நினைத்தார்..

அவர் ஆகியிருக்கலாம்.. நாம் ஆக்கியிருக்கலாம்..

உண்மையை எளிமையாய் உணர்த்துபவர்களை, உலகம் வாழ விடுவதில்லை.. ஏனோ?

இவ்வாறு மீரா மிதுன் ட்விட் செய்து இருக்கிறார். மீரா மிதுன் எப்போதும் சர்ச்சையாக பதிவுகளை தான் போடுபவர். தற்போது விவேக் பற்றி பதிவிட்டு இருப்பதற்கும் நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

கமெண்ட்..

அடுத்த செய்தி