ஆப்நகரம்

ரோஜாவை செண்பகத்தின் மகள் என்று சொன்ன சக்திவேல்: அதிர்ந்த குடும்பம்

ரோஜாவின் கையை பிடித்துக் கொண்டு நீ செண்பகத்தின் மகள் தானே என்று சக்திவேல் சொன்னதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 14 Oct 2020, 10:30 am
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலும், பூவே உனக்காக சீரியலும் ஒன்றாக இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகிறது.
Samayam Tamil roja


மகாசங்கமம்: ரோஜாவும், பூவே உனக்காக சீரியலும் சேர்ந்து வரப் போகிறது

காதல், மோதல், சண்டை, வில்லத்தனம் என அனைத்தும் இந்த இரண்டு சீரியல்களிலும் உள்ளது. ஒப்பந்த திருமணம் செய்து கொண்ட ரோஜாவும், அர்ஜுனும் காதலாகி கசிந்துருகி இப்போது ஆதர்ச தம்பதிகளாக இணைந்து வாழ்கின்றனர்.

இவர்களின் ரொமான்ஸ் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இவர்களை பிரிக்க வேண்டும் என ஆரம்பத்தில் இருந்து வில்லத்தனமான பிளான்கள் போட்டு வரும் அனுவிற்கு தொடர்ந்து ஏமாற்றம் தான். அவர் ஆனாலும் நிறுத்தாமல் பந்துகளை வீசிக் கொண்டே இருந்தாலும் அதை சிக்சர்களாக மாற்றி பறக்க விடுகிறார் ரோஜா.

முதலிரவில் ரோஜாவிற்காக கவிதை எல்லாம் கூறி அசத்தி விடுகிறார் அர்ஜுன். திருமண நாள் விழாவிற்கு வந்த பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கும் ரோஜாவிற்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

மகள் ரோஜாவிற்கு அவரது அம்மா கொடுத்த பரிசுப்பொருள் மனதை தொடுகிறது. ஒரு தாய் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு இருப்பது போல் ஒரு அழகான பொம்மையை கொடுத்துள்ளார். அதைப் பார்த்து கண் கலங்குகிறார் ரோஜா.

ரோஜா குடும்பத்துடன் பூவே உனக்காக குடும்பத்தைச் சேர்ந்த சக்திவேல், கதிர், பூவரசி ஆகியோர் இணைந்து கெஸ்ட் ஹவுசில் சந்தித்துள்ளனர். புதிதாக திருமணம் ஆன கதிரும், பூவரசியும் இணைந்து குல தெய்வ கோவிலுக்கு வந்த இடத்தில் அன்னப்பூரணி அம்மாவின் வீட்டு கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ளனர்.

செண்பகத்தின் பள்ளி பருவ நண்பர் சக்திவேல், இறந்து போன செண்பகத்தை நினைத்துக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் வரும் ரோஜாவை பார்த்து ஆச்சரியப்படுகிறார். செண்பகம் என்று ரோஜாவின் கையை சக்திவேல் பிடிக்க அதைப் பார்த்த அர்ஜுனும், ரோஜாவின் மாமியாரும் நெகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரோஜாவிற்கு பேச்சே வரவில்லை.

அப்போது அன்னப்பூரணி அம்மா அனுவை கூப்பிட்டு இது தான் செண்பகத்தின் மகள் என்று சக்திவேலுக்கு அறிமுகம் செய்து வைக்க அதை நம்ப முடியாமல் தவிக்கிறார் அவர். ரோஜா தான் உண்மையான குடும்ப வாரிசு, தனது மகள் செண்பகத்தின் வயிற்றில் பிறந்த பேத்தி என்பதை அன்னப்பூரணி புரிந்து கொள்வாரா? ரோஜாவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வாரா? பூவரசியும், கதிரும் மனம் ஒத்த தம்பதியினராக வாழ்வார்களா? இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

அடுத்த செய்தி