ஆப்நகரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்: நம்ம பொண்டாட்டியா இது..?: மீனாவின் செயலால் வாயடைத்து போன ஜீவா.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்டில் மீனா கஷ்டப்படுவதை பார்த்து வருத்தப்படுகிறான் ஜீவா.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 21 Feb 2023, 11:22 am
பாண்டியன் ஸ்டோர்ஸில் பகலெல்லாம் வீட்டிலுள்ள தனம், முல்லை, ஐஸ்வர்யா மூவருக்கும் வேண்டிய எல்லாவற்றையும் ஒன்று விடாமல் செய்து கொடுக்கிறாள் மீனா. இதனிடையில் கதிர் தனத்திற்காக புதிதாக கட்டில் வாங்கி வீட்டில் வந்து மாட்டுகிறான். கேர் டேக்கர் நான் படுக்க கொஞ்சம் இடம் விட்டுட்டு கட்டிலை போடுங்க. இல்லன்னா நைட் நேரத்துல என்மேல ஏறி நடக்க ஆரம்பிச்சுடுவாங்க என கிண்டலடிக்கிறாள் மீனா.
Samayam Tamil Pandian Stores
Pandian Stores


அதன்பின்னர் நைட் அனைவரும் வீட்டிற்கு வந்த பின்பு கண்ணன் மூர்த்தியை கிண்டலடிக்க ஆரம்பிக்கிறான். கதிரும் இன்னைக்கு எதுவும் கதை இல்லையா என கேட்டு கலாய்க்கிறான். முல்லையும் இத்தனை நாளா எத்தனை கதை சொல்லி இருக்கீங்க. நேரடியாவே நீங்க எங்ககிட்ட சொல்லி இருக்கலாம்ல என கேட்கும் போது, நான் எப்படிப்பா சொல்றது என மூர்த்தி வெட்கப்படுகிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதனை தொடர்ந்து அனைவரும் சாப்பிட ரெடியாகும் போது தனம் சாப்பாடு எடுத்து வைக்க எழுந்திருக்கிறாள். அவளை வம்படியாக உட்கார வைக்கும் மீனா, நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். நீங்க உட்காருங்க என சொல்லி சாப்பாடுகளை எடுத்து வைக்கிறாள். அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்பு, மீனாவையும் சாப்பிட சொல்கிறான் ஜீவா. இவ்வளவு நேரமாச்சு. சாப்பிடுங்க என கூறுகிறாள்.

அதன்பின்னர் வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் முல்லையை பார்க்க வீட்டுக்கு வருகின்றனர். தொடர்ச்சியா இந்த வீட்ல மூன்று பேர் கர்ப்பம் ஆகி இருக்காங்க என சொல்லி ஆச்சரியப்படுகின்றனர். இந்த வீட்டை நீங்க வர்றதுக்கு முன்னாடி ராசியே இல்லாத வீடுன்னு ஒதுக்கி வைச்சாங்க. ஆனா இப்போ இந்த வீட்டை எல்லாரும் ஆச்சரியமா பார்க்குறாங்க என சொல்லிவிட்டு செல்கின்றனர்.

Baakiyalakshmi Serial: குழந்தையிடம் படு கேவலமாக நடந்து கொண்ட ஈஸ்வரி: கடுப்பான எழில்.!

அதனை தொடர்ந்து இரவில் தனம் பாத்திரம் விளக்க வரும் போது, அவளை அனுப்பிவிட்டு மீனாவே அந்த வேலையும் செய்கிறாள். ஜீவா அங்கு வந்து அவளுக்கு கெல்ப் பண்ணுகிறான். நீயா மீனா இதெல்லாம் பண்றன்னு ஆச்சரியப்படுகிறான். அவளும் ஜீவா உதவி செய்வதை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள். அதன்பின்னர் இரவில் தூங்கும் போது, அனைவரும் கட்டிலில் இருக்க, மீனா மட்டும் தரையில் படுத்திருப்பதை வருத்தத்துடன் பார்க்கிறான் ஜீவா. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: இனியா, ராதிகா இடையில் வெடித்த சண்டை: ஆடிப்போன கோபி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி