ஆப்நகரம்

தாயான சந்தோசத்தை கணவனிடம் சொல்லத்தவிக்கும் தனம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்

அம்மாவான மகிழ்ச்சியில் இருக்கும் தனம், அதை கொண்டாட முடியாமல் தவிக்கிறார். வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் எதையும் சொல்ல விடாமல் தடுக்கின்றன.

Samayam Tamil 8 Dec 2020, 8:28 pm
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாசமான அண்ணன் தம்பிகளின் மூத்த அண்ணி தனம், கணவனின் குடும்பத்தை பாசத்தோடு பார்த்துக் கொள்ளும் மூத்த மருமகள். கணவன் சொன்ன ஒரு வார்த்தையை வேத வாக்காக ஏற்று குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.
Samayam Tamil Pandian Stores Serial Written Update


அதையே ஒரு குறையாக குத்திக்காட்டி பேசுகிறார்கள். சொந்த பந்தங்களின் குத்தல் பேச்சை கேட்டும் குறைபட்டுக்கொள்ளாமல் வாழ்க்கை நடத்துகிகறார். கொழுந்தன் ஜீவாவின் மனைவி மீனாவிற்கு குழந்தை பிறந்த பிறகு தனத்தை குறை சொல்வது அதிகரித்து விட்டது. கடவுள் புண்ணியத்தில் தனமும் கர்ப்பமாகியிருக்கிறார்.

மசக்கை வாந்தி மயக்கம் வந்தாலும் அதை அனுபவிக்க முடியாத தவிப்பில் இருக்கிறார். காரணம் மீனாவின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் அம்மா வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் விடுகின்றனர். அந்தக் கவலையில் குடும்பத்தினர் அனைவரும் இருக்கின்றனர்.

தான் கர்ப்பமான விசயத்தை எப்படியாவது கணவனிடம் சொல்லி விட வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறார் தனம். கதிரும் முல்லையும் தனத்தின் தவிப்பை புரிந்து கொள்ள முடியாமல் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.

தனம் எதையும் சொல்லும் மனநிலையில் இல்லை. கணவன் மூர்த்தியிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறார். கணவன் மூர்த்தி நள்ளிரவில் வீட்டுக்கு வருகிறார். வெட்கமும் சந்தோஷம் கலந்த கலவையான மனநிலையில் வரவேற்கிறார் தனம்.

குழந்தை எங்கே என்று கேட்கும் மூர்த்தியிடம் நடந்த உண்மைகளை ஒன்று விடாமல் சொல்லி விடுகிறார் கடைசித் தம்பி கண்ணன். தனம் தாயான விசயத்தை இன்றைக்கும் சொல்ல முடியாமல் போய்விட்டது.

கர்பமாக இருக்கும் தனம் அந்த சந்தோஷத்தை எப்போது சொல்வார், அதைக்கேட்டு மூர்த்தியும் அவரது குடும்பத்தினர்களும் எப்படி எடுத்துக்கொள்வார்களை என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.

அடுத்த செய்தி