ஆப்நகரம்

பிரசவத்திற்காக அம்மா வீட்டுக்கு கிளம்பும் தனம்: கண் கலங்கி நிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 27 Jul 2021, 2:05 pm
ஆடல் பாடலுடன் களைகட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக விஜய் டிவியை சார்ந்த பிரபலங்கள் வருகை தருகின்றனர். அவர்கள் டான்ஸ் ஆடி தனத்திற்கு சந்தானம் வைத்து, வளையல் போட்டு விடுகின்றனர். அதன்பின்னர் ஐஸ்வர்யாவை பார்க்கும் கண்ணன், அவளுக்கு ரோஜாப்பூ கொடுக்கிறான். அவளும் சிரித்து கொண்டே வாங்கி கொள்கிறாள். இதனை பார்க்கும் பிரசாந்த், கோபமாக அங்கிருந்து செல்கிறான்.
Samayam Tamil பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்


அதனை தொடர்ந்து வளைகாப்பு முடிந்த பிறகு தனத்தை கிளம்பலாம் என அழைக்கின்றனர். நல்ல நேரம் முடிய போகுது, இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும் என்கின்றனர். அதன்பின்னர் அத்தையிடம் போயிட்டு வர்றேன் என சொல்லும் தனம், மூர்த்தியிடமும் கிளம்புறேன் மாமா என சொல்கிறாள். அப்போது சோகமாக இருக்கும் அவன், உன்னை பார்க்க தினமும் உங்க வீட்டுக்கு வர்றேன் தனம் என சொல்கிறான்.

அதன்பின்னர் ஜீவாவிடம் சொல்லும் போது, அவன் பங்ஷன் நடக்கும் போது ஜாலியா இருந்துச்சு. இப்போ ஒரு மாதிரி இருக்கு என சொல்கிறான். மீனாவும் போகாதீங்க அக்கா என சொல்லி அழுகிறாள். முல்லையிடமும் எல்லாத்தையும் பார்த்துக்கோ என சொல்கிறாள். அதனை தொடர்ந்து கண்ணனிடம் போயிட்டு வர்றேன் என சொல்லும் போது, அவன் நானும் உங்ககூடவே வந்துடவா அண்ணி என கேட்கிறான். அப்போது அவள் கொஞ்ச நாள் தான, சீக்கிரம் வந்துடுவேன் என சொல்கிறான்.

பாக்யா உணவை கேலி செய்யும் சந்துரு உறவினர்கள்: கண்டமேனிக்கு திட்டும் கோபி!

இதற்கிடையில் கதிர் தனியாக நின்று வருத்தப்பட்டு கொண்டிருக்கும் போது, முல்லை அவனை கூப்பிட வருகிறாள். அவன் வந்தபிறகு தனம் அவளிடம் பத்திரமா இருடா என சொல்லும் போது, அவன் நீங்க பத்திரமா இருங்க என சொல்லி கண் கலங்குகிறான். அப்போது தனம் நீங்க எல்லாரும் இப்படி அழுதா, நான் எப்படிடா போவேன் என சொல்கிறாள். அவள் அம்மாவும், அண்ணனும் நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னாடி கிளம்புவோம் தனம் என சொல்லி அழைத்து செல்கிறார்கள்.

தனம் நடந்து போகும் போது ஓடிவரும் கண்ணன், அவள் கையை பிடித்து அண்ணி ப்ளிஸ் எங்களை விட்டு போகாதீங்க அண்ணி என அழுகிறான். அப்போது தனம் அம்மா எங்க பொண்ணு எங்ககூட இருக்க வேண்டாமா என சொல்லி கத்துகிறாள். தனம், நான் எப்படிம்மா இவுங்கள எல்லாம் விட்டுட்டு வருவேன். நான் இங்கயே இருக்கேன் என சொல்கிறாள். பிரசவம் வரைக்கும் நீ என்கூட இரும்மா. நான் இப்படி இவுங்கள எல்லாம் விட்டுட்டு வர முடியாது என சொல்கிறாள். அவள் அம்மாவும் அதற்கு ஒப்பு கொள்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி