ஆப்நகரம்

ஐஸ்வர்யாவால் மூர்த்தி குடும்பத்தில் அரங்கேறிய சண்டை: பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 14 Oct 2021, 4:25 pm
கயல் அழுகும் சத்தம் கேட்டு வீட்டிற்குள் வரும் கண்ணன் அவளை வெளியே தூகிட்டு வந்து ஐஸ்வர்யாவுடன் கொஞ்சி கொண்டிருக்கிறான். தனமும், மீனாவும் அவர்களை பார்த்து புன்னகைக்கின்றனர். அப்போது திடீரென வீட்டிற்கு வரும் மூர்த்தி அவர்களை பார்த்து கோபப்படுகின்றனர். கண்ணன் அவனை பார்த்துவிட்டு வீட்டிற்குள் குழந்தையை கொடுக்க வருகிறான். அவனிடம் குழந்தை அழுது கொண்டிருந்ததால் தூக்கிட்டு போனதாக சொல்கிறான்.
Samayam Tamil பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்


மூர்த்தி அவர்களிடம் குழந்தை அழுகுற சத்தம் கூட கேட்காம அப்படி என்ன வேலை பார்த்துட்டு இருக்கீங்க. கயலை பார்த்துக்க ஆளே இல்லையா? என கத்துகிறான். இதனிடையில் முல்லை குடோனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக வருகிறாள். அப்போது நாளைக்கு கடை வேலை ஆரம்பிப்பது குறித்து ஜீவா பேசுகிறான். அப்போது அவள் நான் வேணா நாளைல இருந்து கடைக்கு உதவிக்கு வரவா என கேட்கிறாள்.

கதிர் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறான். அதன்பின்னர் மறுநாள் மீனா கோலம் போட வெளியில் வரும்போது ஐஸ்வர்யா அவளிடம் வந்து பேசுகிறாள். அப்போது முல்லை வரவும் அவள் சென்று விடுகிறாள். உள்ளே வந்ததும் அவகிட்ட ஏன் பேசுறீங்க. ஏற்கனவே இந்த வீட்ல நெறைய பிரச்சனை இருக்கு என சொல்லும் போது மீனா அவளிடம் சண்டைக்கு போடுகிறாள். அதை பார்த்து ஜீவாவும், கதிரும் அவர்களிடம் வந்து என்ன பிரச்சனை என விசாரிக்கின்றனர்.

Baakiyalakshmi Serial: பண சிக்கலில் இருக்கும் கோபிக்கு உதவ நினைக்கும் பாக்யா!

மீனா கதிரிடம் நான் ஐஸ்வர்யா கிட்ட ரெண்டு வார்த்தை பேசுனதுக்கு இவுங்க ஏதோ மாமியார் மாதிரி என்கிட்ட வந்து கேள்வி கேட்டுட்டு இருக்காங்க? நீங்களே இந்த நியாயத்தை கேளுங்க என சொல்கிறாள். அப்போது கதிர் அவளை கிண்டல் செய்து சமாளித்து விடுகிறான். மீனாவும் அவள் கலாய்ப்பது தெரியாமல் சிரித்து கொண்டு போய் விடுகிறாள்.

அதன்பின்னர் கடை பிளான் பற்றி ஜீவா தனத்திடம் சொல்கிறான். அப்போது முல்லை மீனாவை கலாய்க்கவும் அவள் சண்டைக்கு போகிறாள். அப்போது தனம் உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை? ஏன் இப்படி பேசிகிறீங்க என கேட்கிறாள். ஜீவாவும், கதிரும் அப்போது ஆரம்பிச்ச சண்டை இப்படி கண்டினியூ ஆகுது என சொல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி