ஆப்நகரம்

எல்லாத்தையும் பண்ணிட்டு கமுக்கமாக இருந்துருக்கீங்க: மீனாவிடம் வசமாக சிக்கிய தனம்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவளின் அண்ணன் மூர்த்தி குடும்பத்தினரிடம் போட்டுடைக்கிறாள்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 18 Feb 2023, 11:04 am
தனம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல முடியாமல் தவிக்கிறான் மூர்த்தி. தம்பிகளிடம் இதை எப்படி சொல்வது என யோசிக்கிறான். அதன்பின்னர் இரவில் வீட்டுக்கு வெளியில் நின்று தம்பிகளிடம் பேசுவதை போல் நடித்து பார்க்கிறான் மூர்த்தி. அப்போது வெளியில் வரும் கண்ணன் அண்ணன் தனியாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறான்.
Samayam Tamil Pandian Stores
Pandian Stores


அய்யய்யோ அண்ணனுக்கு ஏதோ ஆச்சு என பதட்டத்துடன் வீட்டுக்குள் வருகிறான். ஜீவா, கதிரிடம் உடனே வெளிய வாங்க என அழைக்க, அந்த நேரத்தில் தனமும் அங்கு வருகிறாள். மூவரையும் அழைத்துக்கொண்டு வெளியில் வந்து வாசலில் நிற்க, மூர்த்தி தனியாக நின்னு பேசுவதை பார்த்து ஷாக்காகின்றனர். இந்த மனுஷன் ஏன் இப்படி அசிங்கப்படுத்துறாரு என தனமும் யோசிக்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவள் கோபத்துடன் சத்தம் போட அப்போது தான் மூர்த்திக்கு சுற்றி ஆள் நிற்பது புரிகிறது. உடனடியாக தம்பிகள் என்னாச்சு என அவனிடம் கேட்க, நாடகம் ஒண்ணுல நடிக்கிறதுக்கு ஒத்திகை பார்த்தேன் என சொல்லி சமாளிக்கிறான். தனமும் அவருக்கு நாடகம்ன்னா ரொம்ப பிடிக்கும் என சொல்லி அவனை காப்பாத்துகிறாள். ஆனால் விடாமல் கண்ணன் அண்ணனுக்கு ஏதோ ஆச்சு என சொல்ல தனம் அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லி மூர்த்தியை உள்ளே அழைத்து சென்றுவிடுகிறாள்.

மறுநாள் காலையில் எப்படியாவது தம்பிகளிடம் சொல்லிவிட வேண்டும் என உட்கார வைத்து மூர்த்தி மறுபடியும் பேச ஆரம்பிக்க, அந்த சமயத்தில் கஸ்தூரி குடும்பத்துடன் வருகிறாள். தனமின் அண்ணன் வந்து இருவருக்கும் வாழ்த்து கூற, அனைவரும் புரியாமல் முழிக்கின்றனர். உங்களுக்கு விஷயமே தெரியாதா நான் இரண்டாவது தடவை மாமா ஆக போறேன் என சொல்லி ஷாக் கொடுக்கிறான்.

Baakiyalakshmi Serial: அமிர்தாவை கடுமையாக எச்சரித்த ஈஸ்வரி: பாக்யாவின் அதிரடி முடிவு.!

கஸ்தூரியும் இதை சொல்ல முடியாம தான் தனம் தவிச்ச என சொல்ல மீனா, அக்கா இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க என கன்னத்தில் அடித்து சிரிக்கிறாள். அதனை தொடர்ந்து முல்லை, ஐஸ்வர்யா இருவரும் தனத்தை கலாய்க்கின்றனர். இந்தப்பக்கம் தம்பிகள் ஒன்றாக சேர்ந்து மூர்த்தியை கலாய்த்து தள்ளுகின்றனர்.

அதன்பின்னர் தனமும் கர்பத்தை மறைக்க என்னலாம் பண்ணாலோ அதையெல்லாம் சொல்லி கிண்டல் அடிக்கின்றனர். மேலும் மீனா, கர்பமாக இருந்த சமயத்தில் முல்லை, ஐஸ்வர்யாவிடம் எனன் கேட்டாலோ அதே கேள்வியை தனத்திடம் கேட்க வருகிறாள். உடனே தனம் நீ என்ன கேட்க வர்றன்னு தெரியும். ஆளவிடு என சொல்லி ஓடுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: அமிர்தாவிடம் கோபத்தில் கொந்தளித்த ஈஸ்வரி: ஆடிப்போன எழில்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி