ஆப்நகரம்

Pandian Stores: அடுத்து மீனாவா..?: 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' வீடு தாங்கதுப்பா..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் தனம், முல்லை, ஐஸ்வர்யா மூன்று பேரையும் கவனித்து கொள்வதில் கடுப்பாகி ஜீவாவிடம் சண்டை போகிறாள்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 20 Feb 2023, 11:36 am
தனம் கர்பமாக இருக்கும் விஷயம் தெரிந்த பின்பு மீனா தலையில் வேலைகள் எல்லாம் கட்டப்படுகிறது. அவளும் ஓடி ஓடி வேலை செய்து டயர்டாகிறாள். இதனிடையில் மீனாவின் குழந்தை. தனத்தின் குழந்தை இரண்டையும் பார்த்துக்கொள்வதும் பெரிய தலைவலியாகிறது மீனாவுக்கு. முல்லை, ஐஸ்வர்யா, தனம் மூவரையும் பார்த்துக்கொள்வதோடு மட்டும் இல்லாமல் அவர்கள் கேட்பதை எல்லாம் செஞ்சு கொடுக்கவும் செய்கிறாள்.
Samayam Tamil Pandian Stores
Pandian Stores


ஒருக்கட்டத்திற்கு கடுப்பாகி ஜீவாவையே போன் போட்டு வீட்டுக்கு வர சொல்கிறாள். அவன் வந்ததும் என்னால முடியலைடா. நியாயமா பார்த்தா நம்ம தான் இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து தனியா ரூம்ல இருக்கோம். அப்போ நம்ம தான கர்ப்பம் ஆகி இருக்கணும் என சொல்கிறாள். அப்பறம் என்ன உனக்கு இன்னொரு குழந்தை வேணும்னா சொல்லு. அதுக்கு ரெடி பண்ணலாம் என ஜீவா சிரித்துக்கொண்டே சொல்ல, மீனா கடுப்பாகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதெல்லாம் விட இன்னும் எத்தனை மாசம் இருக்கு. எப்படிடா பார்த்துக்கிறது. குழந்தைகளும் பிறந்துட்டா அவ்வளவுதான் என சொல்கிறாள். உடனே அவன் அதான் அண்ணி அம்மா, முல்லை அம்மா எல்லாம் இருக்காங்கள்ள. அப்பறம் என்ன? நீ இவ்வளவு அலுத்துக்கிற. குழந்தையே பெத்துக்க கூடாதுன்னு சொல்றீயா என கேட்க, அப்படி எல்லாம் இல்லைடா. தனம் அக்கா கர்ப்பம் ஆனது எனக்கு சந்தோசம் தான். ஆனா என இழுக்கிறாள்.

அதற்கு அவள் ஐஸ்வர்யா கூப்பிட அங்கு ஓடுகிறாள். அதன்பின்னர் இரவில் கண்ணன், மூர்த்தியை கிண்டல் பண்ண ஆரம்பிக்கிறான். தம்பிகளுக்கு போட்டியாய் வந்துட்டீங்களே என சொல்ல, அவனும் சமாளிக்க முடியாமல் எழுந்து ஓடி விடுகிறான். இதனிடையில் மீனா அனைவருடனும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, ஐஸ்வர்யா வாந்தி எடுத்துட்டு வந்து உட்காருகிறாள்.

Baakiyalakshmi Serial: இனியா, ராதிகா இடையில் வெடித்த சண்டை: ஆடிப்போன கோபி.!

அவள் வந்து உட்கார்ந்ததும் முல்லை வாந்தி வருகிறது என சொல்லி எழுந்து ஓடி வருகிறாள். அவள் வந்ததும் ரொம்ப முடியலையா? நான் வேணா தலையை பிடிச்சு விடவா என தனம் கேட்க, நமக்கே ஒருத்தவங்க உதவிக்கு வர வேண்டிய நிலைமைல இருக்கும் போது, நமக்கு இதெல்லாம் தேவையா என மீனா நக்கலடிக்கிறாள். மூனு பேரும் ஒரு மாசமாவது கேப் விட்டு குழந்தை பெத்துகோங்க.

உங்களையும் பார்த்துக்கிட்டு குழந்தைகளையும் பார்த்துக்க முடியாது என தனம் கூறுகிறாள். அவள் பேசி கொண்டிருக்கும் போதே தனம் வாந்தி வருகிறது என எழுந்து போகிறாள். மூனு பேரையும் பார்த்து உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு சந்தோஷப்படுறதா? இல்லை சங்கடப்படுறதா என சொல்கிறாள். அப்போது முல்லை ஒருவேளை அடுத்து நீங்களும் கர்ப்பம் ஆகிருவீங்கன்னு தோணுது என சொல்ல, உங்களை பார்த்து எனக்கு அந்த ஆசையே போயிருச்சு என மீனா சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: அமிர்தாவை கடுமையாக எச்சரித்த ஈஸ்வரி: பாக்யாவின் அதிரடி முடிவு.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி