ஆப்நகரம்

ராஜா ராணி 2: அர்ச்சனாவை பிடிக்க போலீஸ் வந்தாச்சு.. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்

ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா செய்த தில்லாலங்கடி வேலையை ஹீரோயின் சந்தியா துப்பறிந்து கண்டுபிடித்துவிட்ட நிலையில், தற்போது போலீஸும் வந்திருக்கிறது.

Samayam Tamil 24 Jan 2021, 12:11 am
ராஜா ராணி சீரியலில் வெறும் அட்டை பெட்டியை எறிந்துவிட்டு மொத்த குடோனும் எறிந்துவிட்டது போல நாடகம் ஆடுகிறார் அர்ச்சனா என சந்தியா கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டார். ஆனால் போலீஸிடம் போக வேண்டாம் என அத்தை கூறி இருந்தார் என இந்த வார எபிசோடுகளில் காட்டப்பட்டு இருந்தது.
Samayam Tamil Raja Rani 2


ஆனால் அடுத்த வாரம் போலீஸ் குற்றவாளியை கண்டுபிடிக்க வந்திருக்கிறது என்பது தற்போது வெளியாகி இருக்கும் ஒரு ஷுட்டிங் ஸ்பாட் போட்டோ மூலமாக உறுதி ஆகி இருக்கிறது.

ராஜா ராணி 2 சீரியல் ஹீரோ சித்து தான் ஒரு போலீஸ் உடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். 'அட டெல்லியில் எதோ பிரச்சனையாம்பா.. அதுக்கும் நாம தான் போனுமாம்.. சரி போவோம்’ என கின்டலாக பதிவிட்டு உள்ளார் அவர்.

View this post on Instagram A post shared by Sidhu (@sidhu_sid_official)

ராஜா ரானி சீரியல் தற்போது பரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் குடோனை எரித்தது யார் என தெரிந்துகொள்ள சந்தியா தனது மூளையை பயன்படுத்தி சில தடயங்களை கண்டுபிடித்து வருவது தான். இந்த சம்பவம் விபத்து அல்ல திட்டமிடப்பட்ட ஒன்று என்று அவர் கூறினாலும் வீட்டில் இருக்கும் மற்றவர்களை அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

மேலும் சந்தியா எடுத்து வைத்திருந்த சாம்பலையும் அர்ச்சனா கீழே கொட்டிவிட்டார். அதனால் இனி என்ன புதிய ஆதாரத்தை சந்தியா கண்டுபிடிக்க போகிறார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அடுத்த செய்தி