பார்வதி அறையை அலசும் போலீஸ்
வந்ததும் முதல் வேலையாக பார்வதியின் அறைக்கு சென்று பணம் எந்த இடத்தில் இருந்தது, சாவி எங்கே வைத்திருந்தீர்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்கிறார் இன்ஸ்பெக்டர். தான் பத்திரமாக தலையணைக்கு அடியில் தான் வைத்திருந்ததாக கூறுகிறார் பார்வதி.
எதுவும் தெரியாதது போல அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார் வனஜா. அதன் பின் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை போடலாம் என கூறுகிறார் இன்ஸ்பெக்டர்.
தப்பா நினைச்சிக்காத அருண்
முதலில் அருண் அறையை தான் சென்று சோதனைப்போடுகிறார்கள் போலீஸ். கீழே இருக்கும் கிட்ச்சனையும் சில போலீஸ் அலசுகின்றனர்.
அருண் அறையை சோதனை செய்வதால், 'தப்பா நினைச்சிக்காத அருண்' என ஆதி வந்து கூறுகிறார். 'அவங்க கடமையை தானே செய்கிறார்கள்' என பெருந்தன்மையாக பேசுகிறார் அருண்.
மிளகாய் பொடியால் சிக்கிய வனஜா
அதன் பின் வனஜாவின் அறையை சோதனை போட செல்கிறார் இன்ஸ்பெக்டர். உள்ளே செல்லும் போதே தகராறு செய்கிறார் வனஜா. 'இந்த வீட்டில் அகிலாவுக்கு அடுத்து நான் தான். என் மீதே சந்தேகமா' என சொல்கிறார். ஆனால் போலீஸ் கடமையை செய்தே ஆக வேண்டும் என சொல்லி உள்ளே சென்று சோதனைஇடுகின்றனர்.
அப்போது மிளகாய் பொடி கீழே சிதறி இருப்பதை கான்ஸ்டபிள் பார்த்துவிடுகிறார். செடியிலும் மிளகாய் பொடி இருப்பதை பார்த்து சந்தேகப்பட்டு அதை சோதனை செய்யுமப்டி கூறுகிறார் இன்ஸ்பெக்டர்.
லஞ்சம் கொடுக்க பேரம் பேசும் வனஜா... இறுதியில் உண்மையை ஆதியிடம் சொன்ன போலீஸ்
சிக்கிய பின் என்ன செய்வது என தெரியமல் விழிக்கும் வனஜா போலீசிடம் பேரம் பேசுகிறார். 'இதை வெளியில் சொல்லாதீர்கள், உங்களுக்கு வேண்டியதை கொடுக்கிறோம்' என சொல்கிறார். போலீசும் 'எவ்வளவு தருவீங்க' என கேட்க '5 ஆயிரம் தொடங்கி சில லட்சங்கள் வரை தருவதாக ஒப்புக்கொள்கிறார். எப்படி திருடினார்கள் என்பதையும் உமா சொல்லிவிடுகிறார்.
போலீசும் ஒப்புக்கொண்டு கீழே இறங்கி செல்கின்றனர். ஆனால் வனஜா ஷாக் ஆகும் விதமாக உண்மையை போலீஸ் ஆதியிடம் கூறிவிடுகிறார். பணம் வனஜா அறையில் தான் இருக்கிறது என கூறிவிடுகிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது. இனி என்ன நடக்கும் என்பதை நாளை பார்க்கலாம்.