ஆப்நகரம்

கன்னத்தை கடித்த சர்ச்சை: நடிகை பூர்ணா கொடுத்த விளக்கம்

டிவி ஷோவில் நடனம் ஆடிய பையனின் கன்னத்தில் முத்தமிட்டு கடித்த நடிகை பூர்ணா சர்ச்சையில் சிக்கிய நிலையில் அவர் அது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார்.

Samayam Tamil 21 Sep 2021, 2:51 am
நடிகை பூர்ண கன்னத்தை கடித்து முத்தம் கொடுத்தார் என வீடியோ பரவி பெரிய சர்ச்சை ஆனது. இப்படி அவர் பலமுறை பலரிடம் செய்து இருப்பதும் சர்ச்சைக்கு முக்கிய காரணம்.
Samayam Tamil poorna clarifies on kissing controversy see her clarification
கன்னத்தை கடித்த சர்ச்சை: நடிகை பூர்ணா கொடுத்த விளக்கம்


முத்த சர்ச்சை

நடிகை பூர்ணா தீ சாம்பியன்ஸ் என்ற தெலுங்கு ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்துவருகிறார். அந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற ஒரு போட்டியாளரை பாராட்ட அவரின் கன்னத்தை கடித்திருக்கிறார். அந்த வீடியோ வைரல் ஆகி சர்ச்சையாக மாறி உள்ளது.

பூர்ணாவை நெட்டிசன்கள் அதிகம் விமர்சித்து வருகின்றனர். கோடிக்கணக்கில் மக்கள் பார்க்கும் டிவி நிகழ்ச்சியில் இப்படியா செய்வது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பூர்ணா விளக்கம்

அதிகம் விமர்சனங்களை சந்தித்து வரும் பூர்ண அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். தான் முத்தம் கொடுத்த அந்த பையனை தான் குழந்தை போல நினைப்பதாக கூறி உள்ளார்.

யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நன்றாகவேதெரியும். இது அன்பை வெளிப்படுத்தும் விதம் மட்டும் தான் என அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி