ஆப்நகரம்

இதயத்தை திருடாதே சீரியலின் சிறப்பு எபிசோடு.. திருமணத்தில் பங்கேற்ற முக்கிய பிரபலங்கள்

கலர்ஸ் தமிழின் இதயத்தை திருடாதே சீரியலின் திருமண எபிசோடில் இன்று மற்ற பிரபல சீரியல் நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

Samayam Tamil 19 Apr 2021, 11:15 pm
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இதயத்தை திருடாதே நெடுந்தொடர் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வரும் நிலையில், ஒரு மாபெரும் திருமணம் இதில் இப்போது இடம்பெறவிருக்கிறது.
Samayam Tamil Idhayathai Thirudathey


இத்திருமண நிகழ்வுக்கு இன்னும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் வகையில் இதயத்தை திருடாதேயின் இந்த சிறப்பு எபிசோட்-ல் அதன் மனம் கவர்ந்த ஜோடி ஷிவா-சஹானா ஆகியோருடன் சில்லுனு ஒரு காதல் மற்றும் மாங்கல்ய சந்தோஷம் என்ற இதன் பிற பிரபல நெடுந்தொடர்களின் முக்கிய கதாபாத்திரங்களும் பங்கேற்கின்றனர்.

ஒரே நிகழ்ச்சியில், மக்களின் அபிமானம் பெற்ற இந்த இளம் ஜோடிகள் பங்கேற்பது இதனை ஒரு மறக்கமுடியாத தருணமாக மாற்றுவது நிச்சயம். 2021 ஏப்ரல் 19 அன்று இரவு 7:00 மணி முதல் 9:30 மணிவரை ஒளிபரப்பப்படவுள்ள இந்த மாபெரும் கொண்டாட்டத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பவா லக்‌ஷ்மன் மற்றும் நடிகை வைசாலி தணிகா, இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக கேமியோ கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

இதயத்தை திருடாதேயின் சிறப்பு எபிசோட், ஷிவாவின் தங்கை ஐஸ்வர்யாவின் சிறப்பான திருமண நிகழ்வை மிக அழகாக சித்தரிக்கிறது. எதிர்பாரா திருப்பங்கள், உணர்வுகளின் கொந்தளிப்புகள் மற்றும் பொழுதுபோக்கு என பல தொடர் நிகழ்வுகளாக இந்த திருமணம் அரங்கேறுகிறது.

கலர்ஸ் தமிழின் பிரபல நெடுந்தொடர்களின் நடிகர்கள் பங்கேற்கும் துள்ளலான நடனங்கள் இதனை பார்க்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத இனிய அனுபவமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

நகைச்சுவை நடிகரான பவா லக்‌ஷ்மன் இந்நிகழ்ச்சியில் தோன்றுவது குறித்து பேசுகையில், “முதல் முறையாக கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் நிகழ்ச்சியில் பங்கேற்பது அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதயத்தை திருடாதே போன்ற மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் எனது இந்த கேமியோ தோற்றம் குறித்து பெரும் உற்சாகம் நான் கொண்டிருக்கிறேன். திருமண கொண்டாட்ட நிகழ்வில் நகைச்சுவையையும், உற்சாகத்தையும் கொண்டுவருவதன் மூலம் புத்துணர்ச்சி ஊட்டும் ஒரு திருப்பத்தை இந்நிகழ்ச்சி எனது கேமியோ செயல்பாடு உருவாக்கும். இந்த பாத்திரத்தை மிகவும் அனுபவித்து நான் நடித்தேன். எனது இந்த நடிப்பை பார்வையாளர்களும் பெரிதும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தான் தோன்றுவது குறித்து நடிகை வைசாலி தணிகா கூறியதாவது: “கலர்ஸ் தமிழின் முதன்மையான நிகழ்ச்சியின் இதயத்தை திருடாதே நெடுந்தொடரில் இப்பங்களிப்பின் மூலம் இடம்பெறுவது எனக்கு அதிக உற்சாகத்தையும், கிளர்ச்சியையும் தந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு திருப்பத்தை கொண்டுவருவதால் இது எனது கதாபாத்திரம் பார்வையாளர்களை மகிழ்ச்சிபடுத்தும் என்று நான் உறுதியாக கருதுகிறேன். இந்நிகழ்ச்சியின் திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதை நான் முழுமையாக ரசித்து அனுபவித்தேன். எனது கதாபாத்திரத்தோடு உடனடியாக ஒரு பிணைப்பினை பார்வையாளர்களும் கண்டறிவார்கள் என்று நான் நம்புகிறேன்.”

அடுத்த செய்தி