ஆப்நகரம்

பிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: காதலரிடம் விசாரணை

பிரபல பெங்காலி நடிகை பல்லவி டே கொல்கத்தாவில் இருக்கும் தன் வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

Samayam Tamil 16 May 2022, 10:30 am
பிரபல டிவி நடிகை பல்லவி டே தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil popular tv actress pallavi dey ends life
பிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: காதலரிடம் விசாரணை


பல்லவி டே

பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பல்லவி டே. மோன் மானே நா தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். அவர் கொல்கத்தாவில் இருக்கும் கார்ஃபா பகுதியில் தன் காதலரான சாக்னிக் சக்ரபர்த்தியுடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று தன் வீட்டில் பல்லவி மின்விசிறியில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்கொலை

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பல்லவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பல்லவி தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் பல்லவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். பல்லவியின் மரணம் தொடர்பாக அவரின் காதலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரச்சனை இல்லை

சாக்னிக்கின் பெற்றோர் கூறியதாவது, எங்கள் மகனுக்கும், பல்லவிக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. வேறு ஒரு இடம் பார்த்து தனியாக வாழு, திருமணம் முடிந்த பிறகு பல்லவியுடன் இருக்கலாம் என்று சாக்னிக்கிடம் கூறினேன். ஆனால் என்ன நடந்தது என தெரியவில்லை என்று சாக்னிக்கின் அம்மா தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி

மோன் மானே நா தொடரில் நடித்து வரும் அனாமித்ரா கூறியதாவது, எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. மே 12ம் தேதி தான் சீரியல் ஷூட்டிங்கிற்கு வந்தார் பல்லவி. ஷூட்டிங் முடிந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். தற்போது அவர் உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.

அடுத்த செய்தி