ஆப்நகரம்

வயிற்றில் பிள்ளையோடு உயிருக்கு போராடும் லேகா பிழைப்பாரா? - சந்திரலேகா சீரியல் அப்டேட்

கர்ப்பிணி மகள் என்றும் பார்க்காமல் வசுந்தரா தள்ளிவிட லேகாவின் வயிற்றில் அடிபட்டு மயக்கமடைந்த லேகா உயிருக்கு போராடுகிறார். அதை அறிந்து துடித்து போகிறார் சபரி.

Samayam Tamil 25 Oct 2020, 1:42 am
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சந்திரலேகா, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ஹிட் சீரியல் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.
Samayam Tamil Chandralekha Serial


லேகா செய்த வில்லத்தனத்தை அறிந்த சபரி லேகாவை விவாகரத்து செய்து விடுகிறார். விவாகரத்து ஆன பிறகு தான் லேகா கர்பமாக இருப்பது தெரிய வருகிறது, அதே நேரத்தில் சபரிக்கு சரண்யாவுடன் திருமணம் ஆகிறது. சண்டை அடிதடி என இருந்த சந்திராவும் லேகாவும் ஒன்றிணைகிறார்கள். எப்போதும் கலவரம் செய்துக் கொண்டிருந்த லேகா திருந்தி நல்ல பெண்ணாக மாறிவிடுகிறார்.

லேகாவின் வயிற்றில் இருப்பது தனது குழந்தைதான் என்பதை தெரிந்துக் கொண்ட சபரி, குழந்தையின் மீது உள்ள பாசத்தில் மீண்டும் லேகா நெருங்குகிறார். ஒரு கட்டத்தில் லேகாவை மீண்டும் திருமணம் செய்துக் கொள்கிறார். இது சரண்யாவிற்கு தெரியாது என்று நினைப்பது தான் அவர் செய்த தவறு.

சபரி லேகா இடையேயான உறவு இந்நாள் மனைவியான சரண்யாவிற்கு தெரியவர ருத்ரதாண்டவம் ஆடுகிறார். கோபத்தில் சந்திரா வீட்டின் முன் உட்கார்ந்து பெட்ரோலை தனது மேல் ஊற்றிக் கொண்டு போராட்டம் செய்கிறார். போலீஸ் உதவியோடு லேகா இருக்கும் இடத்தை கண்டுபித்து வீட்டிற்கு கூட்டி வருகிறார் சந்திரா.

லேகா கர்ப்பமாக இருப்பது சரண்யாவிற்கு தெரியவருகிறது. அந்த குழந்தை சபரியினுடையதுதான் என்று தெரிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுகிறார், மயக்க நிலையிலே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார் சரண்யா.

லேகாவையும் சபரியையும் பிரிக்க நினைக்கும் வசுந்தரா, லேகாவின் வீட்டிற்கே சென்று பிரச்சினை செய்கிறார். தாலியை கழட்டி கொடு என பறிக்கிறார். அப்போது ஏற்படும் சண்டையில் கீழே தள்ளி விடுகிறார். தடுமாறி கீழே விழுந்த லேகாவின் வயிற்றில் பெரிதாக அடிபட மயங்கி விழுகிறார்.

லேகாவை, சரண்யா சேர்ந்திருக்கும் மருத்துவமனையில் சேர்க்கிறார் வசுந்தரா. சபரி சரண்யாவிடம் பிரச்சினை செய்ய வேண்டும் என்றே திட்டம் போட்டு அந்த வேலையை செய்கிறார் வசுந்தரா. அதோடு நிற்காமல் சரண்யாவிடம் போய் கொளுத்தி போடுகிறார் வசுந்தரா. இது தெரிந்ததும் சபரியிடம் சண்டை போட்டுக்கொண்டு பாதியிலேயே மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார் சரண்யா.

இவர்கள் சண்டை ஒருபக்கம் இருக்க, லேகா உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்று டாக்டர் சொல்ல, அதற்கு வசுந்தராவோ, என் மகளை காப்பாற்றுங்கள் குழந்தை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று சொல்கிறார்.

அதைக்கேட்ட சந்திரா, குழந்தையையும் லேகாவையும் காப்பாற்ற அய்யனார் கோவிலில் சாட்டையடி பரிகாரம் செய்யப் போகிறார். லேகாவையும், அவரது வயிற்றில் உள்ள குழந்தையையும் நினைத்து கலங்கி போய் நிற்கிறார் சபரி.

லேகாவின் குழந்தை உயிர் பிழைக்குமா? சபரி சரண்யா சண்டை தீருமா? திடீர் திருப்பங்கள் நிறைந்த சந்திரலேகா சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகளில் இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

அடுத்த செய்தி