ஆப்நகரம்

சேர்க்கை சரியில்லை: விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து தூக்கப்படும் பிரியங்கா..?

பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து தூக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 4 Mar 2022, 7:33 pm
தமிழ் சின்னத்திரை விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்றனர்.
Samayam Tamil Priyanka Deshpande
Priyanka Deshpande


பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமயத்தில் மைனா நந்தினி மா.கா.பாவுடன் சேர்ந்து கோ ஆங்கரிங் செய்து வந்தார். அவரை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தனர். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த ஒரு வாரம் கழித்து மீண்டும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எண்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து 2 வாரம் தொடர்ந்து பிரியங்கா தான் நிகழ்ச்சியை நடந்த்தி வந்தார். போன வராம் கூட கெட்டப் ரவுண்டில் பிரியங்கா 96 த்ரிஷா கெட்டபில் வந்தார்.

ஹேமாவை கரெக்ட் பண்ண வெண்பா போட்ட பிளான்: அதிர்ச்சியில் கண்ணம்மா...!

இந்நிலையில், சமீபத்தில் பிரியங்கா பிக் பாஸ் 5 நண்பர்கள் பாவனி, மது, அபிஷேக் உடன் ஐதராபாத் சென்று இருந்தார். இந்த வீடியோவை தனது யூடியூப் சேனலிலும் வெளியிட்டு இருந்தார். பிரியங்காவின் இந்த திடீர் பயணம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் குழுவுக்கு அதிர்ச்சி தந்ததாக கூறப்படுகிறது.

அவர் ஐதராபாத் போன சமயம் மறுபடியும் மைனா நந்தினி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனால் இனிமேல் அவரை வைத்தே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்த விஜய் டிவி குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன.

அடுத்த செய்தி