ஆப்நகரம்

வளைகாப்பு போட்டோவுடன் குட் நியூஸ் சொன்ன பிரியங்கா: வாழ்த்தும் ரசிகர்கள்.!

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 10 Jun 2022, 11:27 am
விஜய் டிவியில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. தமிழ் சின்னத்திரை விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் இவர் கலந்து கொண்டார். இந்த சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்றனர்.
Samayam Tamil Priyanka Deshpande
Priyanka Deshpande


பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமயத்தில் மைனா நந்தினி மா.கா.பாவுடன் சேர்ந்து கோ ஆங்கரிங் செய்து வந்தார். அவரை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தனர். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த ஒரு வாரம் கழித்து மீண்டும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எண்ட்ரி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எக்கச்சக்கமான பாலோயர்களை கொண்டுள்ள பிரியங்கா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.

Bharathi Kannamma: கையும் களவுமாக சிக்கிய வெண்பா.. வச்சு செய்த கண்ணம்மா.!

அதாவது தனது தம்பி ரோகித்தின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதை தெரிவிக்கும் விதமாக ரோகித் மனைவியின் வளைகாப்பு நிகழ்வில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ‘ஆண்டி கிட்ட வா மா’ என பதிவிட்டு, பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார் பிரியங்கா. இதனைப்பார்த்த ரசிகர்கள் பிரியங்காவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)

அடுத்த செய்தி