ஆப்நகரம்

ஒரு நாள் அம்மா இல்லை.. வீட்டையே இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க! புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அட்ராசிட்டி

புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்று என்னவெல்லாம் நடந்தது என பாருங்கள்.

Samayam Tamil 16 Apr 2021, 7:40 am
புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்று லட்சுமி ஒரு நாள் வீட்டில் இல்லாத நிலையில், கிட்சனை கொளுத்திவிட்டார் மகன் சந்தோஷ்.
Samayam Tamil pudhu pudhu arthangal serial today apartment neighbors save a fire accident in lakshmis house
ஒரு நாள் அம்மா இல்லை.. வீட்டையே இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க! புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அட்ராசிட்டி


ஐய்யைய்யோ.. போன் எடுத்துட்டு வரலையா

லட்சுமி மருமகளுடன் சேர்ந்து செக்கை திருப்பி கொடுக்க ஹரி கிருஷ்ணனை பார்க்க செல்கிறார். அந்த நேரத்தில் பவித்ராவிறகு அவசர கால் ஒன்று வர அவர் ரத்தம் கொடுக்க சென்றுவிடுகிறார். அதை ஹோட்டலில் இருக்கும் பெண் லட்சுமியிடம் தாமதமாக தான சொல்கிறார்.

அப்போது போன் செய்யலாம் என பார்த்தால் போனை அவர் எடுத்துக்கொண்டு வரவில்லை.

அப்பளம் சுடும் சந்தோஷ்

அம்மா வீட்டில் இல்லாததால் சாப்பிட என்ன செய்யலாமா என யோசிக்கிறார் சந்தோஷ், இருக்கும் சாப்பாட்டை சாப்பிட உடன் எதுவும் இல்லை என்பதால் எதாவது வேண்டும் என சொல்கிறார் தாத்தா. அதனால் அப்பளம் சுட போவதாக கூறி சந்தோஷ் அடுப்பில் எண்ணையை ஊற்றி அடுப்பை ஆன் செய்கிறார்.

அந்த நேரத்தில் நண்பரிடம் இருந்து போன் கால் வர அவர் அதை பேசுவதில் பிசி ஆகி விடுகிறார்.

தீ விபத்து

எண்ணெய் காய்ந்து காய்த்து புகை வர தொடங்குகிறது. வீட்டில் இருந்து அதிகம் புகை வருவதை பார்த்த மற்ற அபார்ட்மெண்ட் வாசிகள் வேகமாக வந்து கதவை தட்டுகின்றனர். Fire extinguisher கொண்டு வருகிறார் வாட்ச்மேன்.

வந்து பார்த்தால் எண்ணெய் பற்றி எரிந்துகொண்டிருந்தது. அதை அணைக்க உடனே extinguisher பயன்படுத்துகிறார் வாட்ச்மேன்.

அதன் பின் பீட்சா ஆர்டர் செய்து சாப்பிடலாம் என முடிவெடுத்து தாத்தாவும் பேரனும் முடிவெடுக்கின்றனர். வீட்டுக்கு வரும் பவித்ரா வீடு இருக்கும் கோலத்தை பார்த்து ஷாக் ஆகிறார். ஒரு நாள் அம்மா இல்லை என்றால் என்னவெல்லாம் செஞ்சி வெச்சிருக்கீங்க என திட்டுகிறார். குப்பை, கிச்சன் என அனைத்தையும் சந்தோஷ் தான் சுத்தம் செய்யவேண்டும் என சொல்கிறார் பவித்ரா.

லக்ஷ்மி மழையை ரசிக்கும் லக்ஷ்மி - ஹரி

மருமகளுக்காக வெயிட் செய்துகொண்டிருக்கும் லக்ஷ்மியை பார்க்கிறார் ஹரி. என்ன நடந்தது என கேட்க அவர் தான் மருமகளுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும், போன் கொண்டுவரவில்லை எனவும் கூறுகிறார். அதன் பின் ஹரி போனில் மருமகளுடன் பேச 'நீங்க நேராக வீட்டுக்கு போய்டுங்க. நான் ரத்தம் கொடுத்துட்டு வந்துடுறேன்' என சொல்கிறார்.

நான் ட்ராப் செய்கிறேன் என ஹரி பைக்கை ஸ்டார்ட் செய்கிறார். ஆனால் அது ஸ்டார்ட் ஆகவில்லை. அதன் பின் இருவரும் நடந்தே வருகின்றனர். அப்போது வழியில் மழை பெய்கிறது. லட்சுமி வேகமாக சென்று அருகில் இருக்கும் கடையில் நின்றுகொள்கிறார். மழையை ரசிக்க வேண்டும் என ஹரி சொல்கிறார்.

அப்போது லக்ஷ்மி தன் மாமனார் பற்றி கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி