ஆப்நகரம்

லவ் ட்ராக் ஆரம்பிச்சுட்டாங்க.. புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்று!

புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்று அருண் மற்றும் திவ்யா இருவரும் காதலர்களை போல போனில் பேசிக்கொள்கின்றனர்.

Samayam Tamil 11 Jun 2021, 4:43 am
புதுப்புது அர்த்தங்கள் சீரியலின் நேற்றைய எபிசோடில் அருணை ஷில்பாவின் அப்பாவிடம் இருந்து கப்பாற்றி மருத்துவமானியில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர் பவித்ரா மற்றும் சந்தோஷ். அதற்கு பிறகு வீட்டிற்கு செல்லாமல் தனது நண்பரின் வீட்டில் தங்கி இருக்கிறார் அவர். வீட்டிற்கு சென்றால் அம்மா திட்டுவார் என பயந்து அவர் அங்கே இருக்கிறார்.
Samayam Tamil Pudhu Pudhu Arthangal serial (Pic Credits: Zee5)


சந்தோஷ் இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களை மூக்கை நுழைக்காமல் இருங்க சொல்லு என சந்தோஷ் அட்வைஸ் செய்கிறார். "நமக்கு என்ன என கண்டுகொள்ளாமல் இருந்தால் தான் மிடில் க்ளாஸ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அருணுக்கு மட்டும் இல்லை உனக்கும் தான் சேர்ந்து சொல்கிறேன்" என சந்தோஷ் பவித்ராவிடம் கூறுகிறார்.

மேலும் அருண் மற்றும் திவ்யா இருவரும் காதலிக்கிறார்களா என சந்தேகம் எழுப்புகிறார் அவர். அது தனக்கு உறுதியாக தெரியவில்லை என சொல்லும் பவித்ரா, அப்படியே லவ் பண்ணாலும் அது அவங்க பர்சனல் நமக்கு என்ன, என கேட்கிறார் பவித்ரா.

மறுபுறம் திவ்யா சாப்பிட கூட முடியாமல் அருணை நினைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு போன் செய்து நாலாம் விசாரிக்கிறார். அவர் பேசியபிறகு தான் அவர் நிம்மதியாக சாப்பிடுகிறார்.

அருண் மற்றும் திவ்யா இப்படி ரொமான்டிக்காக பேசுவதை அவரது நண்பர் மிக மோசமாக கலாய்க்கிறார். இருந்தாலும் அவர்கள் இருவரும் பேச்சை தொடர்கிறார்கள்.

இத்தனை நாள் அபார்ட்மெண்ட் சண்டை, குடும்ப பிரச்சனை என ஓடிக்கொண்டிருந்த புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் தற்போது லவ் ட்ராக் தொடங்கி இருக்கிறது.

அடுத்த செய்தி