ஆப்நகரம்

லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கமிஷ்னர்.. அருணை அடுத்த நிமிடமே விடுவித்த போலீஸ்! புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்று

கமிஷ்னர் சொன்னதால் அடுத்த நொடியே அருணை விடுவிக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

Samayam Tamil 9 Jun 2021, 6:42 pm
புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நேற்றைய எபிசோடில் அருணை காப்பாற்றுவதற்காக பவித்ரா மற்றும் அவரது கணவர் சந்தோஷ் இருவரும் ஹரி கிருஷ்ணனிடம் உதவி கேட்கின்றனர். அவரும் தனக்கு தெரிந்த பெரிய ஆள் ஒருவரிடம் பேசி அருணை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைக்கிறார்.
Samayam Tamil pudhu pudhu arthangal serial today police releases arun after comissioner intervenes
லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கமிஷ்னர்.. அருணை அடுத்த நிமிடமே விடுவித்த போலீஸ்! புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்று



அருணை விடுவிக்கும் போலீஸ்

அதற்கு பிறகு ஹரி கிருஷ்ணன் அவரது நண்பருடன் பேசுகிறார், அவர் உடனே கமிஷ்னருக்கு போன் செய்து அருணை விடுவிக்க செல்வதாக கூறுகிறார். அதற்குப் பிறகு பவித்ரா மற்றும் கணவர் நேராக ஷில்பாவின் அப்பா வீட்டுக்கு செல்கிறார்கள்

அந்த நேரத்தில் தான் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கமிஷ்னரிடம் இருந்து போன் வருகிறது. அவர் இன்ஸ்பெக்டரை லெப்ட் ரைட் வாங்கி விடுகிறார். இன்னும் இரண்டு நிமிடத்தில் அந்த பையனை விடுவிக்க வில்லை என்றால் மூன்றாவது நிமிடம் உனது வேலை போய்விடும் என எச்சரிக்கிறார்.

அதனால் பயந்து போன போலீஸ் இன்ஸ்பெக்டர் உடனே உள்ளே சென்று அருணை கூட்டி வந்து பவித்ராவிடம் ஒப்படைக்கிறார்.

மன்னிப்பு கேட்கும் போலீஸ்

அருணை அவர்கள் மிகவும் மோசமாக தாக்கி காயப்படுத்தி இருப்பது பற்றி பவித்ரா கடும் கோபமாக பேசுகிறார். என்ன இப்படி மாட்டை அடிப்பது போல அடித்து இருக்கிறீர்களே என கேட்கிறார். நடந்தது எல்லாவற்றுக்கும் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பவித்ராவிடம் கூறுகிறார். அருணை உடனே சென்று மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கிளம்புகிறார்கள் பவித்ராவும் கணவரும்.

திவ்யாவிடம் பேசும் அருண்

திவ்யா அருணை நினைத்து அதிகம் வருத்தமாக இருந்த நிலையில், அவருக்கு உடனே போன் செய்து விஷயத்தை செல்லலாமென கால் செய்கிறார் பவித்ரா. அருண் தற்போது பாதுகாப்பாக எங்களுடன்தான் இருக்கிறார் என சொன்ன பிறகு தான் திவ்யாவுக்கு நிம்மதி பெருமூச்சு வருகிறது.

அதற்குப்பிறகு அருண் மற்றும் திவ்யா இருவரும் மிகவும் எமோஷனலாக பேசிக்கொள்கிறார்கள். அதை பார்த்த பவித்ராவும் டென்ஷனாகி விடுகிறார். தகவல் மட்டும் சொல்ல சொன்னால் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறாய் எனத் திட்டுகிறார். அதனால் பிறகு பேசுவதாக சொல்லி அழைப்பை துண்டிக்கிறார் அருண்.

இது காதல் தான்

அதற்குப் பிறகு அருண் வீட்டில் இருக்கும்போது நண்பர் வந்து சந்திக்கிறார். இப்படி ஏன் செய்தாய், யாரென்றே தெரியாத ஷில்பாவுக்காக தான் இப்படி சென்று அடி உதை வாங்கி கையில் கட்டு போட்டு வந்திருக்கிறாயா என கேட்கிறார். திவ்யா வந்து உதவி கேட்டதால் தான் இதை செய்ததாக அருண் சொல்கிறார்.

இது நிச்சயம் காதல் தான், வேறு எதுவும் இல்லை என் நண்பர் கூறுகிறார். கூடிய விரைவில் திவ்யா மற்றும் அருண் காதல் ஸ்டோரி தொடங்க வாய்ப்பிருக்கிறது.

மறுபுறம் பவித்ராவிடம் சந்தோஷ் அட்வைஸ் செய்கிறார். இது போன்ற தேவையில்லாத விஷயங்களில் உன் தம்பியை தலையிடாமல் இருக்க சொல் என அறிவுரை கூறுகிறார்.

அடுத்த செய்தி