ஆப்நகரம்

காபியில் உப்பு போட்டு கொடுத்த தேவயானி! 'புதுப்புது அர்த்தங்கள்' அப்டேட்

புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்று லக்ஷ்மியின் வீட்டுக்கு ஹரிகிருஷ்ணன் வருகிறார். அவர் கேமரா வாங்க தான் வந்திருக்கிறார் என அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.

Samayam Tamil 11 Apr 2021, 2:13 am
புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்று ஹரிகிருஷ்ணன் லக்ஷ்மியின் வீட்டுக்கு செல்கிறார். அவரை பார்த்து அதிகம் ஆச்சர்யம் அடைகிறார் அவர்.
Samayam Tamil pudhu pudhu arthangal serial update lakshmi surprised to see hari krishnan in her house
காபியில் உப்பு போட்டு கொடுத்த தேவயானி! 'புதுப்புது அர்த்தங்கள்' அப்டேட்


சண்டை போட்ட மாமியார் மருமகளை சேர்த்து வைத்த ஹரி கிருஷ்ணன்

ஹோட்டலுக்கு சாப்பிட வரும் ஒரு குடும்பத்தில் மாமியார் மற்றும் மருமகள் இடையே சண்டை இருப்பதாய் பார்த்த ஹரி உடனே தனது பிஏவை அழைத்து ஒரு விஷயம் செய்ய சொல்கிறார்.

கடையில் மாமியார் மருமகளுக்கு மாறி மாறி ஊட்டினால் பில்லில் 50% டிஸ்கவுண்ட் என அவர் சொல்கிறார். அதற்காக அவர்கள் ஒன்றாக பேச தொடங்கி அதன் பின் நன்றாகவே சண்டையை மறந்து ஒன்று சேர்ந்துவிடுகின்றனர்.

இப்படி ஒரு குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்கிறார் அவர்.

கேமரா வாங்க கிளம்பி தாத்தாவிடம் சிக்கிவிட்டார்

விளம்பரத்தில் பார்த்த பழைய கேமராவை வாங்க லட்சுமி (தேவயானி) இருக்கும் அபார்ட்மென்டுக்கு வருகிறார் ஹரி. அங்கு குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருக்கிறார் அவர். அப்போது பந்து லக்ஷ்மியின் மாமனார் மீது பட்டுவிடுகிறது.

அவர் ஹரியை பார்த்துவிட்டு செருப்பு திருடா என திட்ட தொடங்குகிறார். இவர் டிவியில் வரும் அளவுக்கு பிரபலம் ஆனவர் என வாட்ச்மேன் சொன்னாலும் அவர் கேட்பதில்லை.

காபியில் உப்பு போட்ட லட்சுமி

இவர் அதன் பின் மேலே சென்று லட்சுமி வீட்டின் பெல்லை அலுத்துகிறார். அந்த நேரம் பார்த்துதான் டிவியில் அவரது நிகழ்ச்சியை லட்சுமி பார்த்துக்கொண்டிருக்கிறார். வாரம் ஒருவரது வீட்டுக்கு செல்லப்போகிறேன் என ஹரி அதில் கூறுவதற்கு கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். அதன் பின் கதவை வந்து திறந்து பார்த்து ஹரி வீட்டுக்கே வந்துவிட்டார் என பூரிப்பு அடைகிறார் அவர்.

அவருக்கு காபி போட்டு கொடுக்கும் அவர் பதற்றத்தில் உப்பு போட்டு கொடுத்துவிடுகிறார். அதையும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

கேமரா பற்றி கேட்டு ஷாக் ஆன லட்சுமி

அதன் பிறகு தான் வந்த வேலை பற்றி கூறுகிறார் ஹரி. தான் விளம்பரத்தில் பழைய கேமரா ஒன்றை பார்த்துவிட்டு தான் இங்கு வந்ததாக கூறுகிறார்.

இறந்த கணவரின் நினைவாக அதை வைத்திருக்கும் தேவயானி, ஹரி சொன்னதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி