ஆப்நகரம்

கோடீஸ்வரி: தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்த ராதிகா!

ராதிகா கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியைதொகுத்து வழங்க உள்ளார்.

Samayam Tamil 17 Oct 2019, 3:54 pm
கோலிவுட், சின்னதிரை என்று பிஸியாக வலம் வந்து கொண்டு இருந்தவர் ராதிகா. இவர் தற்போது தொகுப்பாளினியாக புதிய அவதாரம் எடுத்து உள்ளார்.
Samayam Tamil 71613960


பல வருடங்களாக சன் தொலைக்காட்சியில் இருந்த ராதிகா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்குச் சென்றுள்ளார். ‘கோடீஸ்வரி’ என்ற வினாடி-வினா கேம் ஷோவை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ளார்.

விக்ரம் 58வது படத்தில் இணைந்த 'கேஜிஎஃப்' ஹீரோயின்!

உலகத்தில் முதல் முறையாகப் பெண்கள் மட்டுமே பங்கேற்கவுள்ள பிரத்யேக கேம் ஷோ ஆகும். மேலும் பெண்களின் அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு ஆகியவற்றை உலகிற்கு அடையாளம் காட்ட இது பயன் உள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல பெண்களின் கனவுகளை இந்த நிகழ்ச்சி நனவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதற்கான புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், 'அக்டோபர் 28 தேதி முதல் தினமும் 8 மணிக்குத் தினம் ஒரு கேள்வி கேட்கப்படும். 8 கேள்விகளில் எதாவது ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால், நீங்கள் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளலாம்' என்று ராதிகா புரோமோவில் கூறியுள்ளார். ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

'அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி' - ட்விட்டரில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!

முன்னதாக சன் தொலைக்காட்சியில் வாரந்தோறும் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியை ராதிகாவின் கணவர் சரத்குமார் தொகுத்து வழங்கி வந்தார். அப்போது தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. இது தவிர, ராதிகா ‘சித்தி’ சீரியலின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து, நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி