ஆப்நகரம்

மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோ.. ராஜா ராணி 2 நடிகை போலீசில் புகார்

ராஜா ராணி 2 சீரியலில் அம்மா ரோலில் நடித்து வரும் பிரவீனா தன் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட நபர் மீது சைபர் க்ரைமில் புகார் அளித்து இருக்கிறார்.

Samayam Tamil 3 Dec 2021, 11:26 pm
ராஜா ராணி 2 சீரியலில் அம்மா ரோலில் நடித்து வரும் பிரவீனா தன் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட நபர் மீது சைபர் க்ரைமில் புகார் அளித்து இருக்கிறார்.
Samayam Tamil Raja Rani 2


தமிழ் மற்றும் மலையாள சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் அவர் இப்படி ஒரு புகார் அளித்து இருப்பது ரசிகர்கள் அனைவர்க்கும் ஷாக் அளித்து இருக்கிறது.

அது பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருப்பதாவது. "கடந்த சில மாதங்களாக என் பெயரில் செயல்பட்டு வந்த போலி கணக்கு, எனக்கு தெரிந்தவர்களுக்கு தவறான மெசேஜ் மற்றும் புகைப்படங்களை அனுப்பி இருப்பது தெரியவந்தது. அந்த நபரை பிளாக் செய்ய நான் பலமுறை முயற்சி செய்தேன், ஆனால் அது நிற்கவே இல்லை. அதனால் நான் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தேன்."

"அந்த செயலை செய்துவர்கள் தற்போது பிடிபட்டுவிட்டார்கள். அதற்காக ADGP மனோஜ் அப்ரஹாமுக்கு நன்றி. அவருடன் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றி கூறுகிறேன். எனக்காக அவர்கள் டெல்லி வரை சென்று குற்றவாளிகளை பிடித்து இருக்கிறார்கள். அது அவர்கள் கடமை தான் என்றாலும் அவர்களது professionalism பற்றி பாராட்டவே இந்த பதிவு" என அவர் கூறியுள்ளார் அவர்.

View this post on Instagram A post shared by Praveena Lalithabhai (@praveenalalithabhai)

அடுத்த செய்தி