ஆப்நகரம்

Raja Rani 2: அம்மா முடிவால் கொண்டாடும் சரவணன்.. சந்தியாவுக்காக செய்த ஸ்பெஷல் விஷயம்

ராஜா ராணி 2 சீரியலில் இன்று சரவணன் ஹாப்பி மோடில் இருக்கிறார். அம்மா சிவாகாமி வாய்த்த பரிட்சையில் ஜெயித்து சந்தியா நல்ல மருமகள் என பெயர் வாங்கியது தான் அதற்கு காரணம்.

Samayam Tamil 6 Jul 2021, 7:23 am
சந்தியாவை அம்மா ஏற்றுக்கொண்டு விட்டதால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார் சரவணன். அதற்காக தனக்கு ட்ரீட் தர வேண்டும் என்றும் கூறுகிறார் சக்கர. கியர் வைத்த சைக்கிள் வாங்கி கொடுங்கள் என கேட்கிறார் அவர்.
Samayam Tamil Raja Rani 2


அதே போல சந்தியாவுக்கு எதாவது பரிசு வாங்கி கொடுக்கலாம் என தான் நினைப்பதாகவும், என்ன கொடுக்கலாம் என கேட்கிறார் சரவணன். அது எப்படி எனக்கு தெரியும் என சொல்கிறார் சக்கர.

அந்த நேரத்தில் சந்தியாவின் அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் கடைக்கு வருகின்றனர். சரவணனுக்கு அவர்கள் நன்றி கூறுகின்றனர். நீங்கள் பொறுமையாக இல்லை என்றால் இதெல்லாம் நடந்திருக்காது என கூறுகின்றனர். அதற்கு சந்தியாவின் பொறுமை தான் காரணம் என கூறுகிறார் சரவணன்.

அதன் பின் புத்தக கடைக்கு செல்லும் சரவணன், சந்தியாவுக்காக புத்தகம் ஒன்றை பரிசாக கொடுக்க வாங்குகிறார். போராடி ஜெய்த்த பெண்கள் பற்றிய கதைகள் இருக்கும் புத்தகத்தை தான் அவர் வாங்குகிறார்.

வீட்டிற்கு சென்று பாயசம் செய்து சரவணனை அனைவருக்கும் கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறார். ஏன் என சந்தியா கேட்க மகிழ்ச்சியான விஷயத்தை எப்போது கொண்டாடி தான் ஆக வேண்டும் என கூறுகிறார்.

அடுத்த செய்தி