கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து இருப்பவர் பிரவீனா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் மாமியார்
ரோலில் அவர் தற்போது நடித்து வருகிறார். இந்த சீரியல் பரபரப்பாக ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க பிரவீனா பற்றி ஒரு பரபரப்பான தகவல் கடந்த சில தினங்களாக பரவி வருகிறது. அவர் அரசியலில் குதிக்கப்போகிறார் என்றும், விரைவில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் அல்லது கொல்லம் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளார் என்றும் தகவல் பரவியது. ஆனால் அது பற்றி கட்சி தலைமை அல்லது நடிகையின் தரப்பு என யாருமே அதிகாரபூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என கூறி பிரவீனா விளக்கம் கொடுத்திருக்கிறார். அரசியலில் நுழைகிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவிய நிலையில் அவரது விளக்கம் வந்திருக்கிறது.
"எனக்கு இப்படி ஒரு செய்தி பரவுகிறது என்று கூட தெரியாது. நான் அரசியலில் இல்லை. அரசியல் என்றால் என்ன என்று கூட எனக்கு தெரியாது. என்னை அரசியலுக்கு கொண்டு வந்த நபருக்கு நன்றி" என பிரவீனா விளக்கம் கொடுத்துள்ளார்.
ரோலில் அவர் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என கூறி பிரவீனா விளக்கம் கொடுத்திருக்கிறார். அரசியலில் நுழைகிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவிய நிலையில் அவரது விளக்கம் வந்திருக்கிறது.
"எனக்கு இப்படி ஒரு செய்தி பரவுகிறது என்று கூட தெரியாது. நான் அரசியலில் இல்லை. அரசியல் என்றால் என்ன என்று கூட எனக்கு தெரியாது. என்னை அரசியலுக்கு கொண்டு வந்த நபருக்கு நன்றி" என பிரவீனா விளக்கம் கொடுத்துள்ளார்.