சரவணனை உள்ளே விட மறுக்கும் போலீஸ்
சந்தியா மற்றும் சரவணன் இருவரும் போலீஸ் எஸ்பியை பார்ப்பதற்காக செல்கின்றனர். ஆட்டோ காரருக்கு கொடுக்க சில்லறை இல்லை என சொல்லி அதை மாற்றி கொடுத்துவிட்டு வருகிறார் சரவணன். சந்தியா முன்பே உள்ளே சென்றுவிட்ட நிலையில் சரவணனை பார்த்து உள்ளே விட மறுக்கிறார் ஒரு போலீஸ் காரர். மனைவி உள்ளே இருக்கிறார் என சொன்னாலும் அவர் நம்புவதில்லை.
சரவணனை அவர் தள்ளிவிட, சந்தியா வெளியில் வந்து அவரை காப்பாற்றுகிறார். விவரத்தை சொல்லி உள்ளே அழைத்து செல்கிறார்.
சந்தியாவை வேலைக்கு அனுப்ப சொல்லும் அதிகாரி
எஸ்பி சந்தியாவின் செயலுக்கு பாராட்தி பூங்கொத்து கொடுக்கிறார். அதன் பின் சந்தியாவின் சொந்த வாழ்க்கை பற்றி கேட்கிறார். அவர் யூனிவர்சிட்டி அளவில் ரேங்க் வாங்கிட்டு வீட்டில் சும்மா இருப்பதை அறிந்து ஷாக் ஆகிறார்.
இப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் முடங்கக்கூடாது அவரை ஒரு வேலைக்கு அனுப்புங்க என சரவணனுக்கு அவர் அட்வைஸ் செய்கிறார். சரவணன் வழக்கம்போல தான் சந்தியாவுக்கு பொருத்தம் இல்லை என சொல்லி மனதில் பேசிக்கொள்கிறார்.