ஆப்நகரம்

Raja Rani 2: சந்தியாவை பாராட்டும் போலீஸ் அதிகாரி, தாழ்வு மனப்பான்மையில் சரவணன்

டூப்ளிகேட் போலீசை பிடித்து கொடுத்த சந்தியாவை போலீஸ் எஸ்பி பாராட்டுகிறார். அவரை வேலைக்கு அனுப்பும்படி சரவணனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

Samayam Tamil 4 Sep 2021, 7:06 am
சந்தியாவை அவரது தைரியத்திற்காக போலீஸ் எஸ்பி பாராட்டுகிறார். வழக்கம் போல தான் படிக்காததை நினைத்து சரவணன் தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறார்.
Samayam Tamil raja rani 2 serial today police sp appreciates sandhiya asks saravanan to send her to make a career
Raja Rani 2: சந்தியாவை பாராட்டும் போலீஸ் அதிகாரி, தாழ்வு மனப்பான்மையில் சரவணன்


சரவணனை உள்ளே விட மறுக்கும் போலீஸ்

சந்தியா மற்றும் சரவணன் இருவரும் போலீஸ் எஸ்பியை பார்ப்பதற்காக செல்கின்றனர். ஆட்டோ காரருக்கு கொடுக்க சில்லறை இல்லை என சொல்லி அதை மாற்றி கொடுத்துவிட்டு வருகிறார் சரவணன். சந்தியா முன்பே உள்ளே சென்றுவிட்ட நிலையில் சரவணனை பார்த்து உள்ளே விட மறுக்கிறார் ஒரு போலீஸ் காரர். மனைவி உள்ளே இருக்கிறார் என சொன்னாலும் அவர் நம்புவதில்லை.

சரவணனை அவர் தள்ளிவிட, சந்தியா வெளியில் வந்து அவரை காப்பாற்றுகிறார். விவரத்தை சொல்லி உள்ளே அழைத்து செல்கிறார்.

சந்தியாவை வேலைக்கு அனுப்ப சொல்லும் அதிகாரி

எஸ்பி சந்தியாவின் செயலுக்கு பாராட்தி பூங்கொத்து கொடுக்கிறார். அதன் பின் சந்தியாவின் சொந்த வாழ்க்கை பற்றி கேட்கிறார். அவர் யூனிவர்சிட்டி அளவில் ரேங்க் வாங்கிட்டு வீட்டில் சும்மா இருப்பதை அறிந்து ஷாக் ஆகிறார்.

இப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் முடங்கக்கூடாது அவரை ஒரு வேலைக்கு அனுப்புங்க என சரவணனுக்கு அவர் அட்வைஸ் செய்கிறார். சரவணன் வழக்கம்போல தான் சந்தியாவுக்கு பொருத்தம் இல்லை என சொல்லி மனதில் பேசிக்கொள்கிறார்.

அடுத்த செய்தி