ஆப்நகரம்

Raja Rani 2: அர்ச்சனாவின் மாத்திரையை பார்த்த சிவகாமி.. சந்தியா தான் இதிலும் சிக்குவாரா?

ராஜா ராணி 2 சீரியலில் இன்று சந்தியா ஹெல்மெட் போட வேண்டியதன் அவசியம் பற்றி சரவணனுக்கு புரிய வைக்கிறார். மறுபுறம் அர்ச்சனாவின் மாத்திரையை சிவகாமி பார்த்துவிடுகிறார்.

Samayam Tamil 19 May 2021, 1:59 am
நேற்றைய ராஜா ராணி 2 எபிசோடில் அர்ச்சனா வாங்கி வந்த சாக்லேட் பவுடர் பாட்டில் காலாவதி ஆகிவிட்டு இருப்பதை பார்த்து சந்தியா அதிர்ச்சியாகி, அதற்குப் பிறகு கடைக்காரரிடம் பேசி அதை மாற்றித் தருவதாக சொல்ல வைக்கிறார். கோர்ட்டில் சந்திக்கப் போவதாக சொன்ன பிறகுதான் அந்த கடைக்காரர் அதற்கு ஒப்புக் கொள்கிறார். அதை பார்த்து மிரண்டு போகிறார் சிவகாமி.
Samayam Tamil raja rani 2 serial today sandhiya gifts helmet to husband sivagami finds archanas tablets
Raja Rani 2: அர்ச்சனாவின் மாத்திரையை பார்த்த சிவகாமி.. சந்தியா தான் இதிலும் சிக்குவாரா?


ஹெல்மெட் போடுங்க

அந்த பாட்டிலை மாற்றுவதற்காக சரவணன் மற்றும் சந்தியா இருவரும் வண்டி எடுத்துக் கொண்டு கடைக்கு போகின்றனர். போகும் வழி போலீஸ் இருப்பதை பார்த்த சரவணன் வண்டியை திருப்புகிறார். மாற்றுப்பாதையில் அவர் செல்லும்போது ஹெல்மெட் போட்டால் காற்று வராது என சொல்கிறார்.

ஹெல்மெட் போட்டால் நமக்கு தான் பாதுகாப்பு, நாம் சரியாக இருந்தால் போலீசை பார்த்து பயப்பட வேண்டியதில்லை என சந்தியா அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

அதற்கு பிறகு அவர்கள் கடைக்கு சென்று அந்த பாட்டிலைமாற்றி கொள்கின்றனர். அந்த நேரத்தில் சரவணனின் நண்பர் ஒருவர் வந்து பேசுகிறார். அப்போது சந்தியா வேகமாக அருகில் இருக்கும் கடைக்கு சென்று ஒரு ஹெல்மெட்டை வாங்கி வந்து சரவணனுக்கு கிப்ட்டாக கொடுக்கிறார். இதை எப்போதும் வண்டி ஓட்டும் போது அணிந்து கொள்ளுங்கள் என்று அன்பு கட்டளை போடுகிறார். சரவணனும் அதை போட்டுக் கொண்டு வண்டி ஓட்டி வருகிறார். போலீஸ் அவர்களை நிறுத்தாமல் அனுப்பி வைக்கிறது. (Pic Credits: Hotstar)

சந்தியா மீது குறை சொல்லும் செந்தில்

சந்தியா ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்குவதற்காக கோர்ட்டுக்கு போவதாக சொன்னதை பற்றி அம்மாவிடம் செந்தில் பேசுகிறார். இதை பார்க்கும்போது சந்தியாதான் உங்களை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்று நிற்க வைத்திருப்பார் என உறுதியாக சொல்ல முடியும் என அவர் கூறுகிறார்.

சிவகாமி செந்திலை திட்டி அனுப்புகிறார். உனக்கும் உன் மனைவிக்கும் சந்தியா மீது அப்படி என்ன தான் வெறுப்பு என சிவகாமி கேட்கிறார்

அர்ச்சனாவின் மாத்திரையை கண்டுபிடிக்கும் சிவகாமி

அர்ச்சனா சமையல்கட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவர் வைத்திருக்கும் மாத்திரைகளை கீழே விழுகின்றன. அது என்ன மாத்திரை என பார்த்து சொல்லும்படி பார்வதியை அழைக்கிறார். பார்வதியும் தெரியவில்லை என சொல்ல, பெயரை வைத்து போனில் பார் என்ன சொல்கிறார் சிவகாமி.

அர்ச்சனா இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியாகி ஓரமாக ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அது என்ன மாத்திரை என்பதை வைத்து இந்த வாரம் பெரிய பிரச்சனையே ராஜா ராணி 2 வீட்டுக்குள் நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது. அனேகமாக அது சந்தியாவின் மாத்திரை என்று தான் பிரச்சனை திரும்ப போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி