ஆப்நகரம்

டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்ட சரவணன்: ராஜா ராணி 2ல் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பம்

ராஜா ராணி 2ல் இன்று சரவணன் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்து சந்தியாவை வீட்டை விட்டு அனுப்புகிறார்.

Samayam Tamil 11 Sep 2021, 6:25 am
சந்தியாவிடம் இருந்த டைவர்ஸ் பேப்பரை வாங்கி அதில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார் சரவணன். அதன் பின் சந்தியாவின் பையை வெளியில் தூக்கி போட்டு அவரை வீட்டை விட்டே அனுப்புகிறார்.
Samayam Tamil raja rani 2 serial today saravanan signs divorce paper and sends sandhiya out of house
டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்ட சரவணன்: ராஜா ராணி 2ல் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பம்


கையெழுத்து போட்ட சரவணன்

நேற்றைய எபிசோடில் சந்தியாவின் பையில் இருக்கும் டைவர்ஸ் பேப்பரை வைத்து பிரச்சனை செய்யும் சரவணன் அதில் கையெழுத்து போட்டு சந்தியா கையில் கொடுக்கிறார். அதனால் அவர் கதறி அழுகிறார். அதன் பின் பையை எடுத்து தனது உடைகளை அழுதுகொண்டே பேக் செய்கிறார்.

வெளியில் இருப்பவர்கள் என்ன ஆனதோ என நினைத்து வருத்தத்தில் இருக்கின்றனர். நேற்று வந்த மாப்பிள்ளை வீட்டாரை நம்பும் நீங்கள் ஏன் இங்கேயே இருக்கும் சந்தியாவை நம்ப மறுக்கிறீர்கள் என மாமனார் மற்றவர்களை கேட்கிறார்.

இதுதான் சந்தியாவின் விருப்பம்

அதன் பின் செந்தில் கதவை திறந்து சந்தியாவின் பைகளை வெளியில் தூக்கி போடுகிறார். சாந்தியை இன்றோடு வீட்டை விட்டு போக போகிறார் என சொல்கிறார் . மேலும் அது தான் சந்தியாவின் விருப்பமும் கூட என கூறுகிறார் சரவணன்.

அதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகின்றனர். ஆனால் தான் சரவணன் ஆசைப்பட்டதால் தான் வெளியே போவதாக சந்தியா கூறுகிறார். அவர் பையை தூக்கிக்கொண்டு மிகவும் எமோஷ்னலாக பேசிவிட்டு கிளம்புகிறார்.

அடுத்த செய்தி