ஆப்நகரம்

சரவணன் சந்தியாவை கோவிலுக்கு அனுப்பும் மாமியார்! ராஜா ராணி 2 அப்டேட்

ராஜா ராணி 2ல் இன்று சந்தியா மற்றும் சரவணன் இருவரையும் கோவிலுக்கு பொங்கல் வைக்க அனுப்ப முடிவெடுக்கிறார் சிவகாமி.

Samayam Tamil 12 Aug 2021, 3:37 am
பார்வதி அவரது ஆண் நண்பரிடம் சிக்கிக்கொண்ட விஷயம் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என சரவணன் மற்றும் சந்தியா இருவரும் முடிவெடுக்கின்றனர்.
Samayam Tamil raja rani 2 serial today sivagami sends saravanan and sandhiya to temple
சரவணன் சந்தியாவை கோவிலுக்கு அனுப்பும் மாமியார்! ராஜா ராணி 2 அப்டேட்


நன்றி சொல்லும் சரவணன்

தன்கையின் மானத்தை காப்பாற்றியதற்காக நன்றி கூறுகிறார் சரவணன். ஆனால் நான் நன்றி சொல்லும் அளவுக்கு எதுவும் பி[பெரிதாக செய்யவில்லை என கூறுகிறார் சரவணன். நான் உங்களை தரக்குறைவாக பேசிவிட்டேன் அதற்கு மன்னித்துவிடுங்கள் எனவும் கேட்கிறார் சரவணன்.

என்னை நம்புவது போல தங்கையையும் நம்புவதாக சொன்னீர்கள். ஒரு அண்ணனாக அதை பேசினீங்க என எனக்கு புரிந்தது. அதை நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறுகிறார் சந்தியா.

பார்வதிக்கு மருதாணி வைக்கும் சந்தியா, திட்டும் சிவகாமி

அதன் பிறகு மருதாணி அரைத்து அனைவரையும் வைக்க சொல்கிறார் சிவகாமி. அப்போது பார்வதியை அழைத்து வைத்துக்கொள்ள சொல்கிறார். அதை வேண்டாம் என அவர் மறுக்க, சந்தியா தான் வைப்பதாக கூறி பார்வதிக்கு வைத்து விடுகிறார்.

அவர் சரியாக வைக்காததை பார்த்து அர்ச்சனா கிண்டல் செய்ய, சிவாகாமி சந்தியாவை திட்டுகிறார். தெரியாத வேலையை செய்ய தான் இவ்வளவு வேகமாக வந்தாயா. உன் கையில் வைத்து பழகு என கூறுகிறார்.

சந்தியா - சரவணன் இருவரையும் கோவிலுக்கு அனுப்பும் சிவகாமி

திருமணம் முடித்தபிறகு கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அதை இவ்வளவுநாள் செய்யவில்லை. உடனே நாளை கிளம்பி சென்று இருவரும் பொங்கல் வைத்துவிட்டு வாருங்கள் என கூறுகிறார் சிவகாமி.

அதற்காக வீட்டில் இருக்கும் பெண்களை தனியாக தன்னுடன் வந்து தூங்கும்படி கூறுகிறார். அர்ச்சனா வேண்டா வெறுப்பாக அதை வேண்டாம் என கணவரிடம் கூறுகிறார்.

சந்தியா -சரவணன் இருவரையும் தனியாக அனுப்புவதற்காக சிவகாமியை பாராட்டுகிறார்கணவர் . இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி