ஆப்நகரம்

ஏன் இப்படி நடக்கிறார் சந்தியா? குழப்பத்தில் சரவணன்! ராஜா ராணி 2ல் இன்று

ராஜா ராணி 2 சீரியலில் இன்று சந்தியா அன்பாக நடந்து கொள்வதை பார்த்து சரவணனுக்கே சந்தேகம் வருகிறது.

Samayam Tamil 14 Jul 2021, 5:22 am
சந்தியா விவாகரத்து செய்ய போகிறார் என தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் சரவணன் தொடர்ந்து அவர் மீது கோபத்தை காட்டி வருகிறார். ஆனால் சநதியா அவரிடம் பாசமாக நடப்பது பார்த்து அவருக்கே சந்தேகம் வருகிறது. (Pic Credits: Hotstar)
Samayam Tamil raja rani 2 serial update saravanan confused about sandhiyas behavior
ஏன் இப்படி நடக்கிறார் சந்தியா? குழப்பத்தில் சரவணன்! ராஜா ராணி 2ல் இன்று


சண்டை போடும் சிவகாமி

சரவணன் துணி துவைத்து கொண்டிருப்பதை பார்க்கும் சிவகாமி மிகவும் கோபமாக சென்று சந்தியாவிடம் பேசுகிறார். இனி வீட்டில் எந்த வேலையும் செய்யாதே என சொல்கிறார். என்ன ஆனது என கேட்டால் சரவணன் துணி துவைத்து கொண்டிருப்பது பற்றி சொல்கிறது.

சிவகாமி கோபமாக பேசிக்கொண்டு இருக்கும்போது சரவணன் அங்கு வருகிறார். துணி துவைத்ததில் என்ன தவறு, இதற்கும் சந்தியாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என சொல்கிறார், எல்லாவற்றிற்கும் சநதியா தான் காரணம் என நினைப்பதை நிறுத்துங்கள் அப்போது தான் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என சரவணன் சொல்கிறார்.

வருத்தத்தில் சிவகாமி

சரவணன் இப்படி பேசியது சிவகாமிக்கு வருத்தம் அளிக்கிறது. அதன் பிறகு அறையில் கணவருடன் பேசும்போது வருத்தமாக பேசுகிறார். மாற்றத்தை ஏற்றுக்கொள்ள உன் மனம் மறுக்கிறது என சிவகாமியிடம் சொல்கிறார் கணவர்.

அப்படி என்றாலே நாளையில் இருந்து உங்கள் துணிகளை நீங்களே துவைத்துக்கொள்ளுங்கள் என கூறுகிறார் அவர். அதை கேட்டு ஷாக் ஆன அவர் சிவகாமியை சமாதானப்படுத்தி சமாளிக்கிறார்.

அன்பு காட்டும் சந்தியா, குழப்பத்தில் சரவணன்

சந்தியா அறையில் இருக்கும் போது சரவணனை உள்ளே நுழைந்துவிட கீழே விழுந்து இருவருக்கும் நடுவில் ரொமான்ஸ் தான். ஆனால் விவாகரத்து விஷயம் பற்றி சரவணன் நினைத்து பார்க்க உடனே சோகம் ஆகி விடுகிறார்.

ஆனால் சந்தியா மகிழ்ச்சியாகவே அவர் மீது அன்பு காட்டிக்கொண்டிருக்கிறார். விட்டு விட்டு போக முடிவெடுத்துவிட்டு ஏன் இபப்டி நடந்துகொள்கிறார் என சரவணனுக்கே சந்தேகம் வருகிறது. ஆனால் விவாகரத்து பேப்பர் பற்றி அவரிடம் நேரடியாக கேட்க தைரியம் இல்லாமல் நிற்கிறார் அவர்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

அடுத்த செய்தி