ஆப்நகரம்

Raja Rani 2: அடிப்பாவி.. நீதான் திருடுனியா! அர்ச்சனா வீடியோ பார்த்து ஷாக் ஆகும் சரவணன்

அர்ச்சனாவின் உண்மை முகம் தற்போது சரவணனுக்கு தெரியவருகிறது. கேமராவில் இருக்கும் வீடியோவை பார்த்து அவர் கடும் அதிர்ச்சி ஆகிறார்.

Samayam Tamil 23 Jun 2021, 11:13 pm
ராஜா ராணி 2 சீரியலின் நேற்றைய எபிசோடில் சரவணன் நகை கடைக்கு சென்று ஒரு நெக்லஸ் செய்ய ஆர்டர் கொடுத்து வருகிறார். சந்தியா தான் நகையை திருடினார் என அம்மா சிவகாமி பழி போட்டிருக்கும் நிலையில் சரவணன் இப்படி செய்கிறார்.
Samayam Tamil raja rani 2 serial update saravanan shocked to see video of archana with stolen necklace
Raja Rani 2: அடிப்பாவி.. நீதான் திருடுனியா! அர்ச்சனா வீடியோ பார்த்து ஷாக் ஆகும் சரவணன்


அண்ணனை பார்க்கும் சந்தியா

சந்தியா ஹோட்டலுக்கு சென்று அண்ணன் மற்றும் அண்ணியை பார்க்கிறார். உங்களுக்கு எதாவது பணக்கஷ்டமா? எதற்கு எல்லா நகையையும் அடகு வைத்தீர்கள் என கேட்கிறார். இங்கே ஒரு வீடு வாங்குவதற்காக தான் நகையை அடகு வைத்தோம் என அவர்கள் சொல்கிறார்கள்.

அதனால் எதாவது பிரச்னையா என அண்ணன் கேட்க சந்தியா மறைக்கிறார். அதன் பின் சந்தியா அந்த அடமானம் வைத்த டாக்குமெண்டை வாங்கி கொண்டு கிளம்புகிறார்.

கேமராவை எடுத்து வரும் மயிலு

வேலைக்காரி மயிலு அர்ச்சனாவின் அறைக்கு துணிகளை வைப்பதற்காக செல்கிறார். அந்த நேரத்தில் அங்கு டேபிள் மீது கேமரா இருப்பதை பார்க்கிறார். அதை எடுத்து பார்க்கும்போது அவர் தெரியாமல் சில பட்டன்களை அழுத்திவிட்டதால் அது எதோ ஆகிவிடுகிறது.

அது பழுதாகிவிட்டது என நினைத்து அதை சந்தியாவிடம் கொடுத்து சரி செய்ய சொல்லலாம் என நினைத்து அதை எடுத்து செல்கிறார். வழியில் சிவகாமி மயிலை பார்த்துவிட்டு சந்தியா வீட்டில் இல்லை சொல்கிறார். ஆனால் சிவகாமி கண்ணில் படாமல் கேமராவை எடுத்து கொண்டு வெளியில் செல்கிறார் அவர்.

வீடியோ பார்த்து ஷாக் ஆகும் சரவணன்

மயிலு அந்த கேமராவை எடுத்துகொண்டு சரவணனிடம் போகிறார். அவர் அதை பார்த்துவிட்டு சரி செய்து வைப்பதாக சொல்லி மயிலை அனுப்புகிறார்.

அதன் பின் கேமராவை அவர் பார்க்கும்போது அதில் இருக்கும் வீடியோவை பார்த்து ஷாக் ஆகிறார். அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் அந்த நெக்லஸை திருடி வைத்துக்கொண்டு போட்டு பார்ப்பது அதில் பதிவாகி இருக்கிறது.

டைவர்ஸ் அப்ளிகேஷன் - சந்தியாவின் பையில் வைக்கும் தோழி

சந்தியா அவரது அண்ணனை சந்தித்துவிட்டு நடந்து வந்துகொண்டிருக்கும்போது அவரது தோழி அனிதா அவரை பார்க்கிறார். நகை பிரச்சனையால் சந்தியாவை மாமியார் மோசமாக பேசியதை தான் போனில் கேட்டதாக கூறும் அவர், ஹாஸ்டல் அப்ளிகேஷன் மற்றும் டைவர்ஸ் அப்ளிக்கேஷன் என இரண்டையும் காட்டி, இது உனக்குத்தான் என சொல்கிறார்.

ஆனால் சந்தியா அதை வாங்க மறுக்கிறார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க விரும்பவில்லை என கூறுகிறார் அவர். ஆனால் அனிதா அவரது பையில் அதை வைத்துவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவு பெற்றது.

அந்த அப்ளிகேஷனால் என்னவெல்லாம் பிரச்சனை வருமோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி