ஆப்நகரம்

Raja Rani 2: சரவணன் கோபத்தில் எடுக்கும் முடிவு, ராஜா ராணி 2ல் வெடித்த புது சிக்கல்

ராஜா ராணி 2ல் இன்று சரவணன் சந்தியாவிடம் கோபமாக பேசிவிட்டு அவரது துணியை அவரே துவைக்க போகிறார். அதனால் கோபமான சிவகாமி சந்தியாவிடம் சண்டைக்கு போகிறார்.

Samayam Tamil 13 Jul 2021, 3:32 am
இத்தனை நாள் சந்தியாவுக்கு வீட்டில் மற்றவர்களால் தான் பிரச்சனை வந்தது, அதில் எல்லாம் சரவணன் அவருக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் தற்போது சந்தியாவை தவறாக புரிந்துகொண்ட சரவணனால் சந்தியாவுக்கு சிக்கல் வருகிறது.
Samayam Tamil raja rani 2 serial update saravanan upset about santhiya brings a new problem for her
Raja Rani 2: சரவணன் கோபத்தில் எடுக்கும் முடிவு, ராஜா ராணி 2ல் வெடித்த புது சிக்கல்



வீட்டை விட்டு வெளியேறும் சந்தியா! கனவா?

சந்தியா இனிமேலும் இந்த வீட்டுக்குள் இருக்க முடியாது என கூறி தன் பையை தூக்கிக்கொண்டு கிளம்புவது போலவும், அவர் பின்னால் சரவணன் கெஞ்சி கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டு நிற்பது போலவும் காட்டப்படுகிறது.

சிவகாமி இதையெல்லாம் பார்த்து தன்னுடைய மானம் போய்விட்டது என புலம்புகிறார். சந்தியா பையை எடுத்துக் கொண்டு சென்று விட்டுப் பிறகு அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுகிறார். இப்படி ஒரு காட்சியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கும் நேரத்தில், அதை சரவணன் தான் மனதில் நினைத்து பார்க்கிறார் என்பது போல ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குனர். எதிர்பார்த்த ட்விஸ்ட் தானே.

சரவணன் எடுத்த முடிவு

சந்தியா போனில் விவாகரத்து பேப்பர் பற்றி பேசியதை சரவணன் அரைகுறையாக கேட்டு விட்டு அவரை தவறாக புரிந்து கொள்கிறார். சந்தியா விரைவில் தன்னை விட்டு பிரிந்து விடப் போகிறார் என நினைத்துக் கண்ணீர் விடுகிறார்.

நடுரோட்டில் நின்று கொண்டு அவர் அழுது புலம்புகிறார். அதற்கு பிறகு வீட்டிற்கு வரும் சரவணன் சந்தியாவிடம் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை. அவர் புதிய துணிகளை போடாமல், பழைய துணியை எடுத்துக் கொண்டு துவைக்கப்போகிறார். அதை சந்தியா தடுத்தாலும் அவர் கேட்பதில்லை. இனி என்னுடைய துணியை நானே துவைத்துக் கொள்கிறேன் என கோபமாக கூறிவிட்டு போய் துவைக்க தொடங்குகிறார் சரவணன்.

போட்டுக் கொடுக்கும் அர்ச்சனா, சந்தியா மீது கடும் கோபத்தில் சிவகாமி

சரவணன் துணி துவைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து அர்ச்சனா ஷாக் ஆகிறார். மயிலு அங்கு சென்று சரவணனை தடுக்கிறார். ஆனால் அவர் பிடிவாதமாக தொடர்ந்து துவைக்கிறார். அர்ச்சனா இந்த விஷயத்தை எப்படியாவது மாமியார் சிவகாமியிடம் சொல்லியே ஆகவேண்டும் என நினைக்கிறார்.

வேகமாக உள்ளே சென்று சிவகாமியிடம் அதுபற்றி நைசாக போட்டு கொடுக்கிறார். அதைக்கேட்டு கோபமான அவர் வெளியில் வந்து பார்க்கிறார். சரவணன் துணி துவைத்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொந்தளிக்கிறார். எங்கே அந்த சந்தியா அவளிடமே நான் கேட்கிறேன் என கோபமாக கூறிவிட்டு போகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவுபெற்றது.

இந்த பிரச்சனை இன்னும் எவ்வளவு பெரிதாகி வெடிக்கும் என்பதை நாளை பார்க்கலாம்.

அடுத்த செய்தி