ஆப்நகரம்

Raja Rani 2: திட்டமிட்டு கூட்டிச்செல்லும் மாமியார்.. கிராமத்தை பார்த்து அதிர்ச்சியில் சந்தியா!

ராஜா ராணி 2ல் இன்று சந்தியா மற்றும் சரவணனை அழைத்துக்கொண்டு சிவகாமி கணவருடன் கிராமத்திற்கு சென்று சேர்கிறார்.

Samayam Tamil 22 Apr 2021, 10:17 pm
ராஜா ராணி 2 குடும்பத்தினர் ஒரு திருமணத்திற்காக தற்போது கிராமத்திற்கு கிளம்பி செல்கின்றனர்.
Samayam Tamil raja rani 2 serial update sivagami and family reaches village sandhiya shocked
Raja Rani 2: திட்டமிட்டு கூட்டிச்செல்லும் மாமியார்.. கிராமத்தை பார்த்து அதிர்ச்சியில் சந்தியா!



சந்தியாவை கூட்டிட்டு போறோம்..

சந்தியா மற்றும் சரவணன் இருவரையும் ஊருக்கு திருமணத்திற்காக கூட்டி செல்வதாக முடிவெடுக்கின்றனர். ஆனால் சந்தியா அங்கு வந்தால் அவரால் அங்கு பாட்டியை சமாளிக்க முடியுமா என சரவணனின் அப்பா கேட்கிறார்.

அங்கு வந்தால் தான் மாமியார் என்றால் எப்படி இருப்பார் என தெரியவரும். பார்த்து தெரிந்துகொள்ளட்டும். என சிவகாமி சொல்கிறார்.

அர்ச்சனா ரிட்டர்ன்ஸ்

மறுநாள் காலை அனைவரும் கிளம்ப தயாராகின்றனர். அப்போது தான் மற்றொரு மருமகளான அர்ச்சனா வீட்டுக்கு திரும்பி வருகிறார். ஊருக்கு செல்கிறோம் என அர்ச்சனாவிடம் சந்தியா சொன்னதும் அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அந்த ஊரில் இருப்பவர்கள் எப்படிபட்டவர்கள், அத்தை ஒரு முடிவோடு தான் சந்தியாவை அங்கு கூட்டி செல்கிறார் என மனதுக்குள் நினைத்து மகிழ்ச்சி கொள்கிறார் அவர்.

அதன் பின் விடைபெற்றுக்கொண்டு கிளம்புகின்றனர்.

ஷேர் ஆட்டோல போகணுமா..

பேருந்தில் சென்று அங்கு ஊரில் இறங்கி நிற்கின்றனர். இனி ஷேர் ஆட்டோ பிடித்து போகவேண்டும் என சொன்னதும் கடும் அதிர்ச்சி அடைகிறார். ஷேர் ஆட்டோ அதிகம் கூட்டமாக வருகிறது. அதில் அனைவரும் ஏறிக்கொள்கின்றனர்.

இந்த கூட்டத்திலும் சரவணன் சந்தியா ரொமான்ஸ் மட்டும் தொடர்ந்து நடக்கிறது.

பயப்படும் சந்தியா

ஊருக்குள் நுழைந்ததுமே சில விஷயங்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் சந்தியா. கோவிலில் பூசாரி முன் ஒரு பெண் ஆடிக்கொண்டிருக்கிறார். அவரை வேப்பிலை கொண்டு அடிக்கிறார்கள். அதை பார்த்து சந்தியா அதிர்ச்சி உடன் பேச, கிராமத்தில் இதெல்லாம் சாதாரணம், இது அவர்கள் நம்பிக்கை என சொல்கிறார் சிவகாமி.

இதையும் திருத்துகிறேன் என கிளம்பிடாதே என எச்சரிக்கவும் செய்கிறார். அதன் பின் நடந்து செல்லும் வழியில் ஒருவர் கையில் அரிவாளுடன் அமர்ந்திருக்கிறார். அதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார் அவர்.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி