ஆப்நகரம்

Raja Rani 2: சந்தியாவை கூட்டிட்டு போக வேண்டாம்.. பெரிய பிளான் போடும் மாமியார்

ராஜா ராணி 2 சீரியலில் இன்று சிவகாமி சந்தியாவை நிச்சயம் 3 மாதம் கழித்து வீட்டை விட்டு அனுப்ப போவதாகக் கூறுகிறார்.

Samayam Tamil 17 Apr 2021, 2:03 am
குடும்ப திருமணம் ஒன்றிற்காக அனைவரும் செல்ல வேண்டும் என கணவர் சொல்ல, சந்தியாவை கூட்டி செல்ல வேண்டாம் என சொல்கிறார் சிவாகாமி.
Samayam Tamil raja rani 2 serial update sivagami plans to avoid sandhiya in a family function
Raja Rani 2: சந்தியாவை கூட்டிட்டு போக வேண்டாம்.. பெரிய பிளான் போடும் மாமியார்


தெருவில் நாடகம்

சந்தியா, சரவணன் இருவரும் சேர்ந்து தெருவில் நாடகம் போடுகின்றனர். தெருவில் இருக்கு அனைவரும் குப்பைத்தொட்டியையோ பயன்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி தான் இந்த நாடகம் போடுகின்றனர்.

இதை அமைதியாக மாமியார் சிவகாமி ஓரமாக இன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். நாடகம் நடக்கும் போது அனைவருக்கும் காபி வழங்கப்பட்டது. அதை இறுதியில் அனைவரும் குப்பை தொட்டியில் போட்டு விட்டு போங்க என சந்தியா சொல்கிறார்.

பெரிதாக ரியாக்ட் செய்யாத சிவகாமி

மாமியார் சிவகாமி சற்று தயக்கத்துடன் வந்து பேப்பர் கப்பை குப்பை தொட்டியில் போடுகிறார். அதை சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அமைதியாக பார்க்கின்றனர்.

இதை எல்லாம் பார்த்து பெரிய ரகளை செய்வார் என எதிர்பார்த்தால் இப்படி அமைதியாக இருந்துவிட்டாரே என பார்வதிக்கும் ஷாக்.

அங்கு வந்ததும் சந்தியா மற்றும் சரவணன் பற்றி அம்மாவிடம் கூறி கோபத்தை கிளப்பினார். ஆனால் இது பொது இடம், எல்லோரும் இருக்காங்க, என்னை சீண்டாதீங்க என எச்சரிக்கிறார் அவர்.

சந்தியாவை ஒதுக்க முடிவெடுக்கும் சிவகாமி

சிவகாமியின் கணவர் தனது தம்பி மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை அனுப்பி இருப்பதாக சொல்கிறார். அதற்கு நம்மை குடும்பத்துடன் அம்மா வர சொல்லி இருக்கிறார் என தெரிவிக்கிறார்.

ஆனால் சந்தியாவை அழைத்து செல்ல வேண்டாம் என சொல்கிறார் சிவகாமி. அவளுக்கு எந்த வேலையும் தெரியாது, வாயை திறந்தாலே பொய், அங்கு வந்து நம் மானத்தை தான் வாங்குவார், அதனால் அவர் கூட்டி செல்ல வேண்டாம் என சொல்கிறார்.

கணவரும் அதற்கு ஒப்புக்கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

அடுத்த செய்தி