ஆப்நகரம்

Raja Rani 2: சந்தியாவுக்கு பாராட்டு விழாவா? குமுறும் மாமியார்! ராஜா ராணி 2 சீரியலில் இன்று

சந்தியா பல்கலைக்கழக ரேங்க் எடுத்ததால் அவருக்கு பாராட்டு விழா நடத்த போவதாக கல்லூரி முதல்வர் கூறுகிறார். இதை கேட்டு குமுறுகிறார் மாமியார் சிவகாமி.

Samayam Tamil 22 Apr 2021, 1:42 am
ராஜா ராணி சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதியை புது ஸ்வீட் கடையில் வேலை செய்ய அழைத்து செல்கிறார் சரவணன். அவர் ஸ்வீட் டெலிவரி செய்ய வெளியில் சென்றபோது நண்பர்கள் பார்த்து கிண்டல் செய்கின்றனர்.
Samayam Tamil raja rani 2 serial update sivagami talks bad about sandhiya getting felicitation ceremony
Raja Rani 2: சந்தியாவுக்கு பாராட்டு விழாவா? குமுறும் மாமியார்! ராஜா ராணி 2 சீரியலில் இன்று



புது வேலை தேடுகிறேன்

ஆதி இதனால் கடுப்பில் அமர்ந்துகொண்டிருக்கும் போது பார்வதி சென்று அவரை கிண்டல் செய்கிறார். ஸ்வீட் கடையில் வேலை செய்வது ஒவ்வொரு நிமிடமும் எரிச்சலாக இருக்கிறது என சொல்லும் ஆதி, தான் புது வேலை தேடப்போவதாக கூறுகிறார்.

மறுபுறம் சந்தியா நியூஸ் பேப்பரில் வரும் வேலைவாய்ப்பு செய்திகளை வெட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்.

வருத்தத்தில் சிவகாமி

வீட்டில் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூடி கொண்டிருப்பது பற்றி உட்கார்ந்து யோசித்து கண்ணீர் விடுகிறார்.

சரவணன் ஆதியை கடைக்கு அழைத்து சென்றது அவனாகவே செய்தாலும் இப்படி சந்தியா மீது குறை சொல்கிறார்கள். இப்படி மாறி மாறி குறை சொல்வது குடும்பத்திற்கு நல்லது அல்ல என அவர் வருத்தப்படுகிறார்.

2 நாள் இருக்க மாட்டோம்..

அதன் பின் கிச்சனில் வேலை செய்துகொண்டிருக்கும் போது சிவகாமி பார்வதிக்கு வேலை சொல்கிறார். இரண்டு நாட்களுக்கு நான் இங்கே இருக்கமாட்டேன். அதனால் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என சொல்கிறார்.

ஆனால் அருகில் இருக்கும் சந்தியாவிடம் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.

சந்தியாவுக்கு பாராட்டு விழா

அதன் பின் வீட்டிற்கு சந்தியா படித்த கல்லூரி முதல்வர் வருகிறார். சந்தியா பல்கலைக் கழக அளவில் ரேங்க் வாங்கி இருப்பதால் அதற்கு பாராட்டு விழா நடத்தப்போவதாக கூறுகிறார்.

ஆனால் சிவகாமி அங்கிருந்து எழுந்து சென்றுவிடுகிறார். நான் பெரியவர்களை ஆலோசித்துவிட்டு சொல்கிறேன் என சந்தியா சொல்லி அவர்க்ளை அனுப்பி வைக்கிறார்.

கேவலமாக பேசும் மாமியார்

வழக்கம் போல சிவகாமி சந்தியா பற்றி கேவலமாக பேசுகிறார். சரவணன் வந்து கேட்கும் போதும் அதையே தொடர்கிறார். மற்றவர்கள் மரியாதை கொடுத்து கேட்டால், அதற்கு மரியாதை கொடுத்து நாம் பேச வேண்டும் என கணவர் சொல்லும் அறிவுரையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அடுத்த செய்தி