ஆப்நகரம்

ராஜா ராணி 2: Question பேப்பரை திருடியதாக வெளியேற்றப்பட்ட சந்தியா! இறுதியில் பெரிய ட்விஸ்ட்

சந்தியா question பேப்பரை திருடி தான் ஜெயித்தார் என குற்றம்சாட்டப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

Samayam Tamil 26 Mar 2021, 11:02 pm
ராஜா ராணி 2 சீரியலில் இன்று சந்தியா செய்யாத தவறுக்காக மாட்டிக்கொண்டு அவமானப்படுகிறார்.
Samayam Tamil raja rani 2 serial written update sandhiya eliminated from contest bharathi gets a huge evidence from lakshmi
ராஜா ராணி 2: Question பேப்பரை திருடியதாக வெளியேற்றப்பட்ட சந்தியா! இறுதியில் பெரிய ட்விஸ்ட்



ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் தற்போது பரபரப்பான பல விஷயங்கள் நடந்து வருகிறது. சந்தியா - சரவணன் இருவரும் 'சூப்பர் குடும்பம்' போட்டியில் பங்கேற்று வருகின்றனர். அதில் பொது அறிவு போட்டி நடக்கும்போது சந்தியா அதிக அளவு கேள்விகளுக்கு பதில் சொல்லி முதலிடம் பிடிக்கிறார்.

அதற்காக அவரை அனைவரும் பாராட்டுகிறார்கள். போட்டியில் கலந்துகொண்ட கண்ணம்மாவும் அவரை பாராட்டுகிறார். (Pic Credits: Hotstar)

சந்தியாவின் ஹான்ட் பேக்கில் question பேப்பர்

அப்போது அங்கு வரும் நிகழ்ச்சி நடத்தும் நபர் அங்கு வந்து சந்தியாவின் கைப்பையை சோதனை செய்ய வேண்டும் என கூறுகிறார். அவரது பையில் கேள்வித்தாள் இருக்கிறது என தகவல் வந்திருப்பதாக கூறுகிறார்.

சோதனை செய்தபோது அவரது பையில் question பேப்பர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார்கள். அதன் பின் இந்த போட்டியில் இருந்து சந்தியா disqualify செய்யப்படுவதாகவும் அறிவிக்கிறார்கள்.

ஆதரவாக நின்ற பாரதி கண்ணம்மா குடும்பம்

இந்த சம்பவத்திற்கு பின் சந்தியாவை பற்றி அவரது குடும்பத்தில் இருக்கும் ஆதி, பார்வதி போன்றவர்கள் மிகவும் மோசமாக பேசுகிறார்கள். சந்தியாவை சிக்கவைத்த பார்வதி அவரை பற்றி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்.

ஆனால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சந்தியா - சரவணன் இருவருக்கும் ஆறுதலாக பேசுகின்றனர். மேலும் இனி இங்கு இருக்க வேண்டாம் என கூறி கிளம்பப்போவதாக சரவணன் - சந்தியா இருவரும்

கூறுகின்றனர்.

சிக்கிய ஆதாரம்

கண்ணம்மாவின் மகள் லட்சுமி, பாரதியிடம் வந்து ஒரு விஷயம் பற்றி கூறுகிறார். தான் நடந்து செல்லும் போது ஒரு உருவம் ஹாண்ட் பேக்கில் பேப்பர் வைத்ததை பார்த்ததாகவும், அதை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சி ஆன பாரதி அதை தன் போனுக்கு அனுப்பிக்கொள்கிறார். அவர் ராஜா ராணி 2 சீரியல் குடும்பத்தை இந்த ஆதாரத்தை காட்டி அவமானத்தில் இருந்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்கலாம்,.

அடுத்த செய்தி