ஆப்நகரம்

Raja Rani 2: முதல் டெஸ்ட்லயே பெயில் ஆகிட்டியே சந்தியா.. கொந்தளித்த மாமியார்

ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா ரோட்டில் ஒரு சிறுவன் உயிரை காப்பாற்றுகிறேன் என சொல்லி அவர் மாமியார் வைத்த டெஸ்டில் தோற்றுவிடுகிறார்.

Samayam Tamil 6 Mar 2021, 5:55 pm
ராஜா ராணி 2 சீரியலில் மருமகள் சந்தியாவுக்கு மாமியார் கொடுத்த முதல் டெஸ்ட்டிலேயே அவர் சொதப்பிவிட்டார்.
Samayam Tamil raja rani 2 serial written update sandhiya fails in first test to purchase vegetables
Raja Rani 2: முதல் டெஸ்ட்லயே பெயில் ஆகிட்டியே சந்தியா.. கொந்தளித்த மாமியார்



ராஜ ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் நேற்று சந்தியாவின் தோழி அவருக்கு போன் செய்து பேசுகிறார். சிவில் சர்விசஸ் தேர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு வாரத்திற்குள் அப்ளை செய்யவேண்டும் என கூறுகிறார். ஆனால் சந்தியா அதை ஏற்க முன்வரவில்லை. மாமியார் வைத்து இருக்கும் 3 மாத கெடு பற்றி சொல்கிறார். அதனால் அவரிடம் நல்ல பெயர் வாங்குவது தான் முக்கியம், இதை பிறகு பார்க்கலாம் என கூறிவிடுகிறார்.


இன்றைய எபிசோடில் சரவணன் சந்தியாவுக்கு ஒரு ஸ்பெஷலான ஸ்வீட் கொண்டு வந்து கொடுக்கிறார். அது சூப்பர் ஆக இருக்கிறது என சந்தியா கூற, தான் தான் அதை செய்ததாக கூறி சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.
'இவ்வளவு நல்லவராக இருக்கும் அவரிடம் ஐஏஎஸ் கனவு பற்றி கூறிவிடலாமா' என யோசிக்கிறார் சந்தியா.

போஸ்டில் வந்த பார்வதியின் மார்க் ஷீட்

சரவணனின் தங்கை சந்தியா காலேஜ் படிப்பில் கோட்டை விட்டு பல அரியர்கள் வைத்து இருக்கும் நிலையில் அவரது மார்க் ஷீட் வீட்டுக்கு வருகிறது. போஸ்ட் மேனிடம் இருந்து சந்தியா தான் அதை வாங்குகிறார். அதை பிரித்து பார்ப்பதற்குள் பார்வதி வந்து அதை வாங்கி விடுகிறார்.

தான் சொன்ன பொய் தெரிந்துவிட கூடாது என்பதற்காக மார்க் ஷீட்டை மறைக்க அந்த நேரத்தில் சந்தியாவை அவரது மாமியாரிடம் மாட்டிவிட்டுவிடுகிறார். அதனால் பார்வதியின் மார்க் ஷீட் ரகசியம் யாருக்கும் தெரியாமல் போகிறது.

காய் வாங்க அனுப்பும் மாமியார்

சந்தியாவை காய் வாங்க மார்க்கெட்டுக்கு அனுப்புகிறார் மாமியார். 150 ரூபாய் காசு கொடுத்து ஒரு பெரிய லிஸ்ட்டையே சொல்கிறார். அவர் செல்லும்போது பூக்காரி சொன்னதால் சரவணன் பூ வாங்கி அவரது தலையில் வைக்கிறார்.

தான் வைக்கும் முதல் டெஸ்ட் இது என மாமியார் சொல்லி அனுப்பியதால் நல்ல காய்களை வாங்கி வர வேண்டும் என சந்தியா நினைக்கிறார். ஆனால் அவர் மார்க்கெட் சென்ற பின் தான் காய் விலையை கேட்டு ஷாக் ஆகிறார். பணம் அத்தனை காய் வாங்க சரியாக இருக்காதே என நினைத்த அவர், எது எடுத்தாலும் 10 ரூபாய் என விற்கும் கடையில் காய்களை வாங்க்கொள்கிறார்.

முதல் டெஸ்டிலேயே பெயில்

சந்தியா காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் வழியில் ஒரு சிறுவன் காரில் சிக்குவது போல வருகிறான். அவனை காப்பாற்ற சந்தியா ஓடுகிறார். அப்போது காய் இருக்கும் பை சக்கரத்தில் சிக்கிவிடுகிறது.

அதை எடுத்து கொண்டு அவர் வீட்டுக்கு சென்ற போது மாமியார் பார்த்து ஷாக் ஆகிறார். நான் வைத்த முதல் டெஸ்ட்டிலேயே பெயில் ஆகிவிட்டாய் என சொல்லி திட்டுகிறார்.

அடுத்த செய்தி