ஆப்நகரம்

Raja Rani 2: சரவணன் கோபத்தில் செய்யும் விஷயம், இதற்கும் சந்தியாவை தான் குறை சொல்லுவாங்களே

ராஜா ராணி 2ல் இன்றும் சந்தியா மீது கோபத்தில் தான் இருக்கிறார் சரவணன், மேலும் பணம் வேண்டும் என்றால் ஸ்வீட் கடையில் வந்து வேலை செய் என சொல்லி ஆதியை அழைத்துக்கொண்டு செல்கிறார் அவர்.

Samayam Tamil 21 Apr 2021, 2:19 am
ஸ்வீட் கடைக்கு தம்பி ஆதியை அழைத்து செல்கிறார் சரவணன். அவர் ஸ்வீட் டெலிவரி செய்ய சென்றதை பார்த்து நண்பர்கள் கலாய்க்கிறார்கள்.
Samayam Tamil raja rani 2 serial written update saravanan takes aadhi to work in sweet shop
Raja Rani 2: சரவணன் கோபத்தில் செய்யும் விஷயம், இதற்கும் சந்தியாவை தான் குறை சொல்லுவாங்களே


கோபமாக இருக்கும் சரவணன்

சந்தியா ஆதிக்கு பணம் கொடுத்ததால் நெற்றில் இருந்து கோபமாக இருக்கிறார். இன்று சரவணன் கடையில் இருக்கும்போது சந்தியா வந்து பேசினாலும் அவர் கண்டுகொள்வதில்லை. வெளியில் செல்ல கிளம்புகிறார். ஆனால் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆவதில்லை.

சந்தியா தான் அதை சரிசெய்து ஸ்டார்ட் செய்து கொடுக்கிறார். அவருக்கு எப்படி இந்த வேலை எல்லாம் தெரியும் என சரவணன் ஆச்சர்யம் அடைகிறார். அதன் பின் சந்தியா மன்னிப்பு கேட்டதால் சமாதானம் அடைகிறார் சரவணன். உங்களிடம் கேட்டுவிட்டு தான் செய்திருக்க வேண்டும், படிப்புக்கு செய்யும் பணம் வீணாகாது என சந்தியா சொல்கிறார்.

சந்தியாவை அனுப்பிடு.. சரவணனிடம் சொல்லும் சிவகாமி

சொந்த ஊருக்கு உறவினர் திருமணத்திற்கு செல்ல இருப்பதால் அதற்காக சிவகாமி தயாராகி கொண்டிருக்கிறார். செந்தில் கடையில் இருந்து சேலை எடுத்துவரச்சொல்லியும் பார்வதி மற்றும் செந்தில் இருவரும் மறந்துவிட்டு வந்தது பற்றி திட்டுகிறார் சிவகாமி.

அதன் பின் சரவணன் பற்றி பேசுகிறார் அவர். நாங்கள் எடுத்து செல்ல ஸ்வீட் செய்துவிட்டாயா என கேட்க, செய்து முடித்துவிட்டேன் என சொல்கிறார்.

சந்தியாவை அழைத்து வரும்படி உன் பாட்டி சொல்லி இருக்கிறார்கள். இவள் வந்தால் வேலை எதுவும் தெரியாது என அவருக்கு தெரிந்துவிடும். அதனால் வேண்டாம். சந்தியா இந்த குடும்பத்திற்கு ஒத்து வர மாட்டார் என சொல்கிறார் சிவகாமி.

மூன்று மாதம் இருக்கே

ஏற்கனவே மூன்று மாதம் டைம் கொடுத்து அதன் முடிவில் தான் நல்ல மருமகளா என தெரியும் என சொன்னீங்களே என சரவணன் கேட்க. அவளுக்கு இன்னும் பல மாதங்கள் கொடுத்தாலும் திருந்தமாட்டாள். அதனால் அவளை இப்போதே வீட்டை விட்டு அனுப்பவும் நான் தயார் என சிவகாமி சொல்ல இந்த வாக்குவாதம் தொடர்கிறது.

இறுதியில் சரவணனின் அப்பா இதை நிறுத்துகிறார்.

ஆதியை அழைத்து செல்லும் சரவணன்

ஆதி படிப்பதற்கு பணம் கேட்டதால் இனி அவன் ஸ்வீட் கடையில் வந்து வேலை செய்யட்டும், நான் சம்பளம் தருகிறேன் என சொல்லி வலுக்கட்டாயமாக அழைத்து செல்கிறார் சரவணன்.

அவர் கடையில் இருக்கிறேன் என சொன்னாலும், அது முடியாது நீ ஸ்வீட் டெலிவரி பண்ணிட்டு வா என அனுப்பி வைக்கிறார்.

ஆதி ஸ்கூட்டரில் செல்லும் போது அவரது நண்பர்கள் பார்த்துவிடுகிறார்கள். யாரும் பார்க்க கூடாது என நினைத்து முகத்தை மூடிக்கொண்டு செல்கிறார். இருந்தாலும் நண்பர்களிடம் சிக்கிவிடுகிறார். இதனால் அவரது அண்ணனை நினைத்து கடும் கோபம் வருகிறது.

சரவணன் செஞ்சது என்ன தப்பு

சரவணன் ஆதியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றது ஏன், சந்தியா தான் தூண்டிவிட்டார் என அம்மாவிடம் சொல்லி சண்டை போட வைக்க வேண்டும் என நினைக்கும் பார்வதி, இதை செந்திலிடம் சொல்லி அம்மாவிடம் பேச வைக்கிறார்.

இதை கேட்ட சிவகாமி 'சரவணன் செய்தது சரியானது தான். நான் செய்ய வேண்டும் என நினைத்ததை அவன் செய்து இருக்கிறான்' என சொல்கிறார். இதனால் பார்வதிக்கு பெரிய நோஸ் கட் ஏற்படுகிறது.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.

அடுத்த செய்தி