ஆப்நகரம்

Raja Rani 2: பார்வதிக்கு பெண் பார்க்கும் அம்மா.. இதிலும் சந்தியாவை இழுக்கும் சரவணன்

ராஜா ராணி 2 சீரியலில் இன்று பார்வதிக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக அம்மா சரவணனிடம் கூறுகிறார். அந்த விஷயத்தி பேசும்போது சந்தியாவை காயப்படுத்தும் வகையில் அவர் பேசுகிறார்.

Samayam Tamil 23 Jul 2021, 1:14 am
சரவணன் சந்தியா மீது கோபத்தில் இருக்கும் நிலையில் அவரை பல்வேறு விதங்களில் காயப்படுத்துகிறார்.
Samayam Tamil raja rani 2 sivagami searches bridegroom for paravathy saravanan hurts sandhiya again
Raja Rani 2: பார்வதிக்கு பெண் பார்க்கும் அம்மா.. இதிலும் சந்தியாவை இழுக்கும் சரவணன்


சந்தியாவை திட்டும் சரவணன்

சரவணன் கோபத்தை போக்க எதாவது செய்ய வேண்டும் என சந்தியா தொடர்ந்து அவருடன் பேசுகிறார். அவர் தூங்கிவிட்ட பிறகு சத்தம் போடுவதை பார்த்து அவர் கோபம் அடைகிறார்.

சந்தியா வேண்டுமென்றே டேபிளை இடித்துக்கொண்டு கத்த, அதை பார்த்து சரவணன் எழுந்து வருகிறார். அதன் பின் சந்தியாவை தூக்கி சென்று அவர் கட்டிலில் போட்டுவிடுகிறார். அனாலும் அவர் சந்தியாவிடம் முகம் கொடுத்து பேசுவதிலை.

சிவகாமியின் ஐடியாவை பின்பற்றும் சந்தியா

சிவகாமி மற்றும் மயிலு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் கணவன் மனைவி சண்டை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது தான் கணவர் வந்தால் சுடுதண்ணீர் போட்டு வைப்பது, விரலில் சுளுக்கெடுத்து விடுவது என பணிவிடை செய்வது என தான் செய்தது பற்றி கூறுகிறார்.

சந்தியாவும் அதையே பின்பற்றுகிறார். குளிக்க சுடுதண்ணீர், குடிக்க பாதாம் பால் என சரவணனுக்கு ஆச்சர்யம் கொடுக்கிறார். அதன் பின் அவரது விரலில் சந்தியா சுளுக்கெடுத்து விடுகிறார். சரவணன் பாதியிலேயே கையை பிடுங்கிக்கொண்டு, இது வேண்டாம், பழகிவிட்டு பின் இல்லாமல் போனால் எனக்கு கஷ்டமாக இருக்கும் என கூறுகிறார்.

பார்வதிக்கு மாப்பிள்ளை பார்க்கணும்

சரவணன் வெளியில் கிளம்பும்போது சிவகாமி அவரை நிறுத்தி பாட்டி கிராமத்தில் இருந்து போன் செய்தார் என்றும், இங்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறார், அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வரவேண்டும் என கூறுகிறார்.

இந்த விஷயத்திலும் சரவணன் சந்தியாவை காயப்படுத்தும் வகையில் பேசுகிறார். சந்தியா அண்னன் போல் பிடிக்காத மாப்பிளைக்கு என் தங்கையை கொடுக்க மாட்டேன், அவளுக்கு பிடித்திருந்தால் தான் எல்லாமே என கூறுகிறார் அவர்.

படிப்பு என சொல்லி எதாவது நல்ல சம்பந்தம் வரும்போது கெடுத்துவிடாதே என சந்தியாவை எச்சரிக்கிறார் சிவகாமி.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி