ஆப்நகரம்

Raja Rani 2 செந்தில் காலில் விழுந்து கதறும் அர்ச்சனா

ராஜா ராணி 2 சீரியலில் இன்று சந்தியா வீட்டை விட்டு வெளியில் போனதற்கு சிவகாமி தான் காரணம் என எல்லோரும் குறை சொல்கின்றனர். பக்கத்துக்கு வீட்டு பெண் வந்து சிவகாமி தான் சந்தியாவை கொடுமைப்படுத்தினார் என பேசிவிட்டு போகிறார்.

Samayam Tamil 15 Sep 2021, 6:24 am
சந்தியாவை பஸ் ஏற்றி விடும் சரவணன், அதன் பின் ஓடிச்சென்று அதே பேருந்தில் ஏறிக்கொள்கிறார். அதன் பிறகு வீட்டில் அனைவரும் இந்த பிரச்சனைக்கு சிவகாமி தான் காரணம் என சொல்கின்றனர்.
Samayam Tamil raja rani 2 update everyone blame sivagami archana pleads to senthil
Raja Rani 2 செந்தில் காலில் விழுந்து கதறும் அர்ச்சனா


கண்ணீருடன் விடை பெறும் சந்தியா

வீட்டில் இருப்பவர்கள் சொல்ல சொல்ல எதுவும் கேட்காமல் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்புகிறார். அவரது பைகளை தூக்கிக்கொண்டு அவரை பஸ் ஏற்றிவிட செல்கிறார். செந்தில் மிக கேசுவலாக 'போய் சேர்ந்த பிறகு போன் போட்டுசொல்லுங்க' என கூறுகிறார். உங்களால் எப்படி இப்படி பேச முடிகிறது, என்னை பிரிவதால் உங்களுக்கு சுத்தமாக வருத்தம் இல்லையா என சந்தியா கேட்கிறார்.

சரவணன் பதில் சொல்வதற்ற்குள் பேருந்து கிளம்பிவிடுகிறது. சந்தியாவும் கண்ணீருடன் விடை பெற்றுக்கொண்டு கிளம்புகிறார்.

அடுத்த செய்தி