ஆப்நகரம்

Raja Rani 2: நீதானே மாத்திரை சாப்பிடுற.. சந்தியாவிடம் வசமாக சிக்கிய அர்ச்சனா

ராஜா ராணி 2 சீரியலில் இன்று அர்ச்சனா மாத்திரை வாங்கிய பில்லை காட்டி சந்தியா ஷாக் கொடுக்கிறார்.

Samayam Tamil 21 May 2021, 4:30 am
சந்தியா தான் கருத்தடை மாத்திரை வாங்கி சாப்பிடுகிஎன்றார் என அர்ச்சனா எல்லை மீறி பேசிய நிலையில் அவருக்கு கடை பில்லை காட்டி ஷாக் கொடுக்கிறார் சந்தியா.
Samayam Tamil raja rani 2 update sandhiya shows tablet bill to archana
Raja Rani 2: நீதானே மாத்திரை சாப்பிடுற.. சந்தியாவிடம் வசமாக சிக்கிய அர்ச்சனா


அர்சனாவை எச்சரிக்கும் சந்தியா

கிச்சனில் இருக்கும் சந்தியாவை சென்று வம்பிழுக்கிறார் அர்ச்சனா. சந்தியா கடும் கோபமாகி மாத்திரை வாங்கிய பில்லை காட்டுகிறார். தப்பை நீ செய்துவிட்டு பழியை என் மீது போட உனக்கு வெக்கமாக இல்லையா.

குழந்தை வேண்டும், வேண்டாம் என்பது உங்களது தனிப்பட்ட விஷயம். அதில் நான் தலையிடவில்லை. அதற்காக என்னை பற்றி இப்படி சொன்னால் நான் எல்லா நாளும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டேன் என எச்சரித்து விட்டு பில்லை கிழித்துப்போடுகிறார்.

கணவருக்கு தெரிந்தால் என்னவாகும்

அந்த நேரம் பார்த்து செந்தில் கிச்சனுக்குள் வருகிறார். அங்கே கீழே கிடைக்கும் பில் பார்த்துவிடுகிறார். அதிர்ச்சியாகும் அர்ச்சனா அமைதியாக நிற்கிறார். டீ போட்டு கொண்டுவா என செந்தில் கூறிவிட்டு போய்விடுகிறார். அதனால் நிம்மதி அடைகிறார் அர்ச்சனா.

தான் மாத்திரை பயன்படுத்தியது கணவருக்கு தெரிந்தால் என்னவாகும், பாசம் எல்லாம் வெறுப்பாக மாறிவிடும் என எண்ணி பயப்படுகிறார் அவர்.

சந்தேகத்தை உறுதிசெய்யும் மாமியார் சிவகாமி

இரவு சந்தியாவிடம் என்ன பிரச்சனை என கேட்கிறார் சரவணன். அவரிடம் கடும் கோபமாக பேசுகிறார் சந்தியா. காலையில் பேசிக்கொள்ளலாம் என கூறிவிட்டு தூங்குகிறார். அதன் பின் காலையில் சிவகாமி சரவணன் அறையை வேவு பார்க்க வருகிறார்.

இன்னும் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் புருஷன் பொண்டாட்டியாக வாழவே ஆரம்பிக்கவில்லை என சந்தேகப்படும் அவர், அறையில் பெட்ஷீட் மடிப்பு களையாமல் இருப்பது, கட்டிலுக்கு அடியில் பாய் இருப்பது பார்த்து அவரது சந்தேகத்தை உறுதி செய்து கொள்கிறார்.

என்ன செய்கிறேன் பார் என சொல்லி அவர் கோபத்துடன்செல்கிறார். இத்துடன் எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி