வீட்டுக்கு வராத சரவணன்
சரவணன் வீட்டுக்கு வந்து கதவை தட்டாமல் அப்படியே மீண்டும் கடைக்கு சென்றுவிடுகிறார். அங்கு அவர் கடையில் படுத்து தூங்குகிறார். இரவு 11 மணி வரை காத்திருக்கும் சந்தியா அதன் பின் கணவரை தேடி செல்ல முடிவெடுக்கிறார்.
வெளியில் இருக்கிறாரா என அவர் வந்து பார்க்க இல்லை என்றதும் கடைக்கு செல்ல முடிவெடுக்கிறார். வேலைக்காரி மயிலு அவருடன் வரட்டுமா என கேட்கிறார், ஆனால் சந்தியா வேண்டாம் என கூறிவிட்டு தனியாக கடைக்கு செல்கிறார்.
கடையில் படுத்து தூங்கும் சரவணன்
சரவணன் கடையிலேயே பாயை விரித்து படுத்து தூங்குகிறார். டைவர்ஸ் வேணுமானு சந்தியாவிடமே கேட்டுடலாமா என சரவணன் யோசிக்கிறார். அப்போது சந்தியாவே வந்து அவரை வீட்டுக்கு அழைக்கிறார்.
இது சீசன் டைம் அதனால் வேலை இருக்கிறது, இரவு முழுவதும் செய்வேன், அதனால் இங்கேயே தூங்குகிறேன் என சொல்கிறார். அவரை வீட்டுக்கு வரும்படி சந்தியா கட்டாயப்படுத்த அவர் கோபமாக பேசிவிட்டு படுத்துவிடுகிறார்.
சரவணனுக்கு அட்வைஸ் செய்யும் அப்பா
இரவு முழுவதும் சரவணன் வீட்டுக்கே வராமல் காலையில் தான் வந்திருக்கிறார் என மயிலு சொல்கிறார். அது பற்றி அப்பா சரவணனை அழைத்து பேசுகிறார்.
சந்தியாவிடம் சொன்ன அதே பதிலை சொல்லி சமாளிக்கிறார் சரவணன். இருப்பினும் சந்தியா பற்றி சரவணனுக்கு சில அட்வைஸ் கொடுக்கிறார் அப்பா.
கோபப்படும் சரவணன்
அதன் பின் சரவணன் தூங்க வரும்போது அவரை தன் அருகில் வந்து படுக்கும்படி சந்தியா கூறுகிறார். வேண்டாம் என சரவணன் படுகிறார். இப்படி படுத்தால் பின்னர் நான் தான் கஷ்டப்படனும் என கூறுகிறார்.
சந்தியா தலையணையை எடுத்து வைத்து தரமாட்டேன் என சொன்னால் அவரிடம் சண்டை போட்டு அதை வாங்குகிறார். சந்தியா அவரிடம் அன்பாக பேச வந்தால் அவர் கோபத்தில் திட்டி அவரை அனுப்பிவிடுகிறார்.
எப்போது தான் முடியும் இந்த பிரச்சனை? பொறுத்திருந்து பார்க்கலாம்.