ஆப்நகரம்

இதுவல்லவா தாய் பாசம்.. மகனின் மானத்தை காப்பாற்றிய சிவகாமி! ராஜா ராணி 2 சீரியலில் இன்று

ராஜா ராணி 2 சீரியலில் இன்று சரவணன் ஸ்வீட் செய்ய முடியாமல் திணறிய நிலையில் அவரது அம்மா தான் மானத்தை காப்பாற்றி இருக்கிறார்.

Samayam Tamil 27 Feb 2021, 6:08 am
அம்மா தன் மீது கோபத்தில் இருக்கிறார் என சோகத்தில் இருக்கும் சரவணன் தொழில் மீது கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார். அவருக்கு ஏற்பட இருந்த பெரிய அவமானத்தில் இருந்து அம்மா சிவகாமி காப்பாற்றுகிறார்.
Samayam Tamil raja rani 2 update sivagami saves son saravanan from a huge problem
இதுவல்லவா தாய் பாசம்.. மகனின் மானத்தை காப்பாற்றிய சிவகாமி! ராஜா ராணி 2 சீரியலில் இன்று


ராஜா ராணி 2

ராஜா ராணி 2ன் நேற்றைய எபிசோடில் ஹீரோ சரவணன் ஸ்வீட் செய்ய முடியாமல் திணறுகிறார். வந்திருக்கும் 500 லட்டு ஆர்டரை கேன்செல் செய்யும்படி சொல்கிறார் அவர். ஆனால் கடையில் வேலை பார்க்கும் பையன் அதை சொல்லிவிட்டு வருவதாக கிளம்புகிறார். ஆனால் சந்தியா அவனை சொல்லவேண்டாம் என கூறிவிடுகிறார்.

சந்தியா மற்றும் மாமனார் சேர்ந்து லட்டு செய்ய முடிவெடுத்து சில விஷயங்கள்; செய்கின்றனர். அவர்கள் தவறாக செய்ததை பார்த்த சிவகாமி அதை அவரே செய்துவிடுகிறார்.

அதை எடுத்துச்சென்று வெளியில் கடையில் ,மகனிடம் கொடுக்க அர்ச்சனாவை கடையில் இருந்து வரச்சொல்கிறார். ஆனால் அவர் வேண்டுமென்றே மிக தாமதமாக வருகிறார்.

அவமானப்பட்ட சரவணன்

லட்டு ஆர்டர் கொடுத்த நபர் சொன்ன நேரத்திற்கு வந்து ஸ்வீட் எங்கே கொடுங்கள் என கேட்கிறார். ஆர்டர் கேன்செல் செய்ய சொன்னது பற்றியும் விளக்குகிறார்.

நீ எல்லாம் என்ன கடை நடத்துற, சொன்ன சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என கோபமாக திட்டுகிறார். அதை தெருவில் இருக்கும் மற்ற நபர்கள் இந்த பிரச்னையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

காப்பாற்றிய அம்மா சிவகாமி

மகன் சரவணன் திட்டு வாங்கி கொண்டிருப்பதை பார்த்த சிவகாமி, உடனே லட்டுகளை கொண்டு சென்று அவரிடம் கொடுத்து அவரது மானத்தை காப்பாற்றுகிறார். அவரும் வேறவழியின்றி இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு அம்மாவின் காலில் விழுகிறார்.

அதன் பின் அவரை தனியாக கூட்டிச்சென்று அட்வைஸ் செய்கிறார்.

அடுத்த செய்தி