தள்ளிப்போன நிச்சயதார்த்தம்
பார்வதியின் நிச்சயதார்த்தத்திற்காக வீட்டில் அனைவரும் ஏற்பாடுகளை பரபரப்பாக செய்து கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து போன் வருகிறது. நிச்சயதார்த்தத்தை நாளை வைக்க முடியாது, இரண்டு நாள் தள்ளி வைத்துக்கொள்ளலாம் என கூறுகிறர் மாப்பிள்ளையின் அம்மா.
என்ன ஆனது என பதறிப்போய் பார்வதியின் அப்பா கேட்க, மாப்பிள்ளைக்கு திடீரென அவசர வேலை வந்துவிட்டது. வீட்டுக்கே வர முடியாத சூழல் அதனால் தான் தள்ளி வைக்கலாம் என சொல்கிறேன், வேறு எந்த காரணமும் இல்லை எனசொல்கிறார்.
வருத்தத்தில் சிவகாமி
மாப்பிள்ளை வீட்டில் திடிரென இப்படி சொன்னது பற்றி பார்வதி அதிகம் வருத்தப்படுகிறார். அது பற்றி அவர் மாப்பிள்ளையிடம் கேட்கிறார். "பேங்கில் திடீரென ஆடிட்டிங் வந்துவிட்டார்கள் அதனால் தான் வரமுடியாத நிலை, நான் இங்கு வந்து சிக்கிக்கொண்டேன். இரண்டு நாள் தானே" என சொல்லி பார்வதியை சமாதானப்படுத்துகிறார் அவர்.
மறுபுறம் சிவகாமி இதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். அது தான் காரணமா இல்லை வேறு எதாவது இருக்குமா என அவர் யோசிக்கிறார். அவர்களாக கேட்டு வந்த சம்பந்தம் தானே, வேறு என்ன இருக்க முடியும் என கணவர் சொல்கிறார்.
சந்தியாவை பார்த்து ஷாக் ஆகும் professor
அதன் பிறகு சந்தியா சரவணன் உடன் ஸ்வீட் டெலிவரிக்காக செல்கிறார். அப்போது சரவணன் ஸ்வீட் கொடுக்கும் வீடு சந்தியா படித்த கல்லூரி professor வீடு என தெரியவருகிறது. அவர் சந்தியாவை அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார். இந்த ஸ்வீட்டுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறார். 'இது எங்க கடை தான், இவர் என் கணவர்' என சொல்கிறார் சந்தியா.
அதன் பின் சில்லறை மாற்றிவர வெளியில் செல்கிறார் சரவணன். 'சந்தியாவுக்கு இப்படி ஒரு படிக்காத புருஷனா என அவர் நினைப்பது தெரிகிறது' என மனதிற்குள் நினைத்துக்கொள்கிறார் சரவணன்.
அசிங்கப்படும் சரவணன்
சரவணன் சென்றபிறகு சந்தியாவுக்கு அவர் அட்வைஸ் செய்கிறார். நீ தற்போது ஐபிஎஸ் ஆகி இருப்பாய் என நான் நினைத்தேன், ஆனால் யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கிய நீ இப்படி ஸ்வீட் டெலிவரி செய்து கொண்டிருக்கிறாய். நம் ஊரில் நல்ல பதவிக்கு வர வேண்டிய படித்த பெண்கள் வாழ்க்கை இப்படி திருமணத்தால் அழிந்து போகிறது என சொல்லி வருத்தப்படுகிறார் அவர்.
நான் அந்த அளவுக்கு மோசமான நிலையில் இல்லை என சந்தியா சொல்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து ஆதங்கமாக பேசுகிறார். அப்போது வரும் சரவணன் மீதி சில்லரை கொடுக்கிறார். அதில் நூறு ருபாய் அதிகம் கொடுத்துவிடுகிறார். 'இத்தனை வருடம் தொழில் செய்ரீங்க, இந்த சின்ன கணக்கு கூட தெரியலையே' என சொல்ல, சரவணனுக்கு ஒரே அசிங்கம் ஆகிவிடுகிறது. அமைதியாக அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.