மகாலட்சுமி, விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்த போது அப்படத்தின் தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி. அவர்களின் திருமணம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த போதும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருவரும் தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். Actor: பெரிய வீட்டு மருமகளை கடைசி வரை ஒருதலையாக காதலித்த லவ் ஃபெயிலியர் நடிகர்!
மகாலட்சுமி பிறந்தநாள்
இந்நிலையில் தனது காதல் மனைவி மகாலட்சுமியின் பிறந்தநாளை கோலாகலமாய் கொண்டாடியுள்ளார் ரவீந்தர். அதோடு தனது மனைவி குறித்தும் உருக்கமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளா ரவீந்தர். அதில் அவர் கூறியிருப்பதாவது, பிறந்தநாள்... ஆம். இன்று என் மகாலக்ஷ்மிக்கு பிறந்தநாள். பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள் என் மகாலக்ஷ்மி. வாழ்க்கைல அது இஷ்டத்துக்கு ஒன்னு வந்தாதான் அத அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. திருமணத்திற்கு பிறகு 'அதை' கைவிட்ட மகாலட்சுமி!
அதிர்ஷ்டம்தான் என் மகாலக்ஷ்மி
அந்த அதிர்ஷ்டம்தான் என் மகாலக்ஷ்மி. ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விஷேச நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்தத ஒரு விசேஷமா கொண்டாடுறது அவன் குடும்பம்தான். ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அத கொண்டாடுறது அவனால உருவாக்கப்பட்ட குடும்பம். அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாதான் உன் பிறந்தநாள நா கொண்டாடுறேன். நம்ம வாழ்க்கைல நாம நிறைய பேர நேசிப்போம். அவங்க நம்மல நேசிக்கனும்னு அவசியம் இல்ல.அவங்க நம்ம மேல மரியாதையாவும் அன்பாவும் இருப்பாங்க. Anu Prabhakar: முதல் கணவரை விவாகரத்து செய்தது இதனால்தான்... 12 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த மஜா பட நடிகை!
உனக்கு பிடிச்ச கிஃப்ட்
ஆனா நாம பல பேர நேசிக்க மறந்துருப்போம். அவங்க நம்மல அளவுக்கு அதிகமா நேசிக்குறவங்களா இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்பதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னே தோனுச்சு. மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்றதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது ஸ்வீட் குடுக்குறது முதியோர் இல்லம் அனாதை இல்லன்னு போய் சாப்பாடு போடுறது பிடிச்ச giftவாங்கி குடுக்குறது இப்டி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றதுதான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. Dhanush: என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்ததுக்கு காரணம் அவர்தான்... தனுஷ் உருக்கம்!
மல்லி பூ
அப்படி ஒரு விஷயம்தான் இந்த 'மல்லிகை பூ'. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான். இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு. So my humble gift வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குதான். I love you mahalakshmi..Happy birthday.. என குறிப்பிட்டுள்ளார் ரவீந்தர். Meena:இரண்டாம் திருமணமா? நடிகை மீனா விளக்கம்!
ரவீந்தர் உருக்கம்
View this post on Instagram A post shared by Ravindar Chandrasekaran (@ravindarchandrasekaran)
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.